உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை; 9 பேரிடம் விசாரணை

உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை; 9 பேரிடம் விசாரணை

1 mins read
326066dc-5002-4705-b773-2abf7a2f0d88
-

உடற்­பி­டிப்பு நிலை­யங்­க­ளில் நடத்­தப்­பட்ட அதி­ர­டிச் சோத­னை­களை அடுத்து, ஒன்­பது பேரி­டம்

விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

அவர்­களில் உடற்­பி­டிப்­புப் பெண்­களும் நிலை­யங்­களை நடத்­து­ப­வர்­களும் அடங்­கு­வர். உடற்­பி­டிப்பு நிறு­வ­னங்­க­ளுக்­கான விதி­மு­றை­களை ஏழு நிலை­யங்­கள் மீறி­

இ­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நான்கு நிலை­யங்­கள் உரி­மம்­இன்றி இயங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கிறது. இன்­னொரு மூன்று உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் பாலி­யல் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

இது­தொ­டர்­பாக இரண்டு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு 37, 45 வயது.

"இவ்­விரு பெண்­களும் உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் பாலி­யல் சேவை­களை வழங்­கி­ய­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது," என்று போலி­சார் தெரி­வித்­த­னர்.

இம்­மா­தம் 4ஆம் தேதி­யி­லி­ருந்து 11ஆம் தேதி வரை நடத்­தப்­பட்ட அதி­ர­டிச் சோத­னையை அங் மோ கியோ போலிஸ் பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் நடத்­தி­னர்.

அங் மோ கியோ அவென்யூ 4 மற்­றும் 11, பிரைட்­டன் கிர­செண்ட், ஹவ்­காங் அவென்யூ 8, அப்­பர் பாய லேபார் சாலை, இயோ சூ காங் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள உடற்­பி­டிப்பு நிலை­யங்­களில் அதி­ர­டிச் சோதனை நடத்­தப்­பட்­டது.

உரி­மம் இல்­லாது உடற்­பி­டிப்பு நிலை­யங்­களை நடத்­தும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இரண்டு ஆண்டு ­கள் வரை சிறைத் தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.