மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடனான சிறப்பு நிகழ்வாக இம்மாதம் 21ஆம் தேதியன்று நடைபெறும் தேசிய தின அணி
வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 'தி ஃபுலோட்@மரினா பே'யைச் சுற்றியுள்ள வட்டாரங்கள் சிறப்பு நிகழ்வு நடைபெறும் இடங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
இம்மாதம் 21ஆம் தேதியன்று அந்த இடங்களில் மிகக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
'தி ஃபுலோட்@மரினா பே'யில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 21ஆம் தேதி அதிகாலை 12 மணியிலிருந்து இரவு 11.59 மணி வரை நடப்பில் இருக்கும்.
பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்போது அங்கு செல்லும் பொதுமக்களை போலிசார் சோதனையிடுவர். இம்மாதம் 21ஆம் தேதியன்று ஒலிபெருக்கி போன்ற குறிப்பிட்ட சில பொருட்களை அங்கு கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

