தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடன் வாங்கும் இளையர் எண்ணிக்கை அதிகம்

3 mins read
1416bf2f-c388-4439-b1ff-c650ed8e08e3
-

வேலையின்மை, குறைந்த வட்டி காரணங்களாக இருக்கலாம்: நிபுணர்கள்

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் இளை­யர்­க­ளின் தனி­ந­பர் கடன்­கள் அதி­க­ரித்து உள்­ளதையும் வட்டி விகி­தங்­கள் உயர்ந்­தால் நிலைமை மோச­மா­கக்­கூ­டும் என்­பதையும் சிபிஎஸ் சிங்­கப்­பூர் கடன்­பற்று கண்­கா­ணிப்­புப் பிரி­வு தர­வு­கள் தெரிவித்துள்ளன.

கடன்­பற்று அட்டை (கிரெ­டிட் கார்ட்) மூல­மான கடன்­களில் கணி­ ச­மான மாற்­றம் தென்­ப­ட­வில்லை என்­ற­போ­தி­லும் 20களில் உள்ள இளை­யர்­கள் வாங்­கும் இதர வகைக் கடன்­தொ­கை­கள் கடந்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்டு முதல் அதி­க­ரித்து வந்துள்ளது.

முப்­பது வய­துக்கு உட்­பட்­ட­வர்­களின் சரா­சரி தனி­ந­பர் கடன் மற்­றும் மிகு­திக் கடன்­பற்று இருப்­பு­க­ளின் விகி­தம் கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் 23 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் கடன்பற்றுக் கண்கா­ணிப்­புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

21 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்ட வய­தி­னர் இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் வாங்­கிய சரா­சரி தனி­ந­பர் கடன்­கள் மற்­றும் மிகு­திக் கடன்­பற்று இருப்பு ஆகி­யன கடந்த ஆண்­டின் இதே காலப் பகு­தி­யோடு ஒப்­பி­டு­கை­யில் $49,689க்கு உயர்ந்தன.

இது 42 விழுக்­காடு ஏற்­றம். கடந்த ஆண்­டின் முதல் மூன்று மாத­ங்களில் இந்­தத் தொகை சரா­ச­ரி­யாக $34,941ஆக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரில் அடை­மா­னம் இல்­லாத கடன்­க­ளுக்கு 2015ஆம் ஆண்டு உச்­ச­வ­ரம்பு கொண்டு வரப்­பட்­டது.

கடன் கொடுப்­போ­ருக்­கும் கடன் வாங்­கு­வோ­ருக்­கும் உத­வும்­ பொ­ருட்டு இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

தற்­போது கடன் வாங்­கும் போக்கு அதி­க­ரித்­த­தற்கு குறை­வான வட்டி விகி­தமும் ஒரு காரணம் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

கொவிட்-19 கால ஆத­ரவு நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் அடை­மா­னம் இல்­லாத தனி­ந­பர் கடன்­க­ளுக்­கான அதி­க­பட்ச ஆண்டு வட்டி 8 விழுக்­காடு என அர­சாங்­கம் வரம்பு விதித்­த­தாக சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­ட­மேற்­ப­டிப்பு நிதித் திட்­டத் துறைத் தலை­வர் யு யிங்­குயி கூறி­னார்.

இளை­யர்­கள் தனி­ந­பர் கடன்­களை வாங்க வேலை­யின்மை மற்­றும் குறை­வான ஊதி­யம் ஆகி­ய­ன­வும் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் நெருக்­க­டி­யி­லி­ருந்து தப்­பிக்க அவர்­கள் இவ்­வாறு செய்­தி­ருக்­க­லாம் என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

30 வய­துக்­குக் குறைந்­தோ­ரி­டை­யி­லான வேலை­யின்மை விகி­தம் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் குறைந்­த­போ­தி­லம் இந்த வய­துப் பிரி­வி­ன­ருக்­கான வேலை இன்மை விகிதம் சரா­சரி 6.4 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் தொடர்ந்து அதி­க­மா­கவே உள்­ளது.

அதே­நே­ரம் இளை­யர் வேலை­யின்மை விகி­தம் உயர்­வது என்­பது தற்­கா­லி­க­மா­னது என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குட்­பட்ட லீ கோங் சியான் வர்த்­த­கப் பள்ளி பேரா­சி­ரி­யர் சோங் சாங்­செங் கூறி­யுள்­ளார்.

இளை­யர்­க­ளுக்­கும் இளை­யர்­களை வேலைக்கு எடுக்­கும் சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் அர­சாங்­கம் ஏற்­கெ­னவே எஸ்ஜி ஒற்­றுமை பயிற்­சித் திட்­டத்­தை­யும் இதர நிவா­ர­ணங்­க­ளை­யும் அளித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"வேலை­யில் இருப்­ப­வர் என்ற கணக்­கில் வந்­தா­லும் பகு­தி­நேர வேலை­யில் இருப்­போர் அல்­லது உணவு விநி­யோ­கிப்­போர் போன்­றோ­ருக்­குப் போது­மான ஊதி­யம் கிடைப்­ப­தில்லை.

"கடந்த ஆண்­டில் வேலை­யின்­மை­யைத் தவிர்க்க பெரும்­பா­லான ஊழி­யர்­கள் சில மணி நேர வேலை­க­ளை­யும் சம்­பள வெட்­டை­யும் ஏற்க முன்­வந்­த­னர்," என்று பேரா­சி­ரி­யர் சோங் தெரி­வித்­தார்.

இளை­யர் கடன் வாங்­கும் நில­வ­ரத்­தின் எதிர்­கா­லம் குறித்து ஓசி­பிசி வங்­கி­யின் தலை­மைப் பொரு­ளி­யல் நிபு­ணர் திரு­வாட்டி செலினா லிங் கருத்­துத் தெரி­வித்­தார்.

"நிலைமை எப்­படி மாறு­கிறது என்­ப­தைப் பொறுத்து எதிர்­கால நில­வ­ரம் அமை­யும். கடன் வாங்­கி­ய­வர்­க­ளுக்கு வேலை கிடைத்­து ­விட்­டால் கடனை அவர்­கள் திருப்­பிச் செலுத்­து­வார்­கள்.

"இல்­லா­வி­டில் கட­னைத் திருப்­பித் தர இய­லா­மல் போய் நிலுவை ஏற்­படும். வட்டி விகி­தம் உய­ரும் நிலை­யும் ஏற்­ப­ட­லாம்," என்­றார் அவர்.

கட­னைத் திருப்­பிச் செலுத்­தாத இளை­யர் விகி­தம் இப்­போது வரை குறை­வா­கவே உள்­ள­தா­க­வும் வரும் காலத்­தில் நிலைமை மோச­மா­கக் கூடுமா என்­பதை இப்­போது கணிப்­பது கடி­னம் என்­றும் பேரா­சிரியர் ருவான் கூறி­யுள்­ளார்.

குறிப்புச் சொற்கள்