கொவிட்-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பக்கவிளைவுகள் விகிதம் 0.12%

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பக்கவிளைவுகள் விகிதம் 0.12 விழுக்காடாக உள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து நான்காவது முறையாக தகவல் அளிக்கும் இந்த அறிக்கை, சிறப்பு அனுமதியின்கீழ் செலுத்தப்படும் சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசியையும் இம்முறை உள்ளடக்கியது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் 7,567,466 அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில், தடுப்பூசிகளுடன் தொடர்புடைய பக்கவிளைவு எனச் சந்தேகிக்கப்படும் 9,403 சம்பவங்கள் குறித்து ஆணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி அவற்றில் 389 சம்பவங்கள், தடுப்பூசியுடன் தொடர்புடைய கடுமையான பக்கவிளைவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளில் இது 0.005 விழுக்காடாகும்.

சினோவேக் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தடுப்பூசிகளுடன் தொடர்புடைய பக்கவிளைவு எனச் சந்தேகிக்கப்படும் 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் கடுமையான பக்கவிளைவுகள் எனக் கூறப்படும் நான்கு சம்பவங்களும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!