பிறருக்கு கொவிட்-19 கிருமியைப் பரப்பும் அபாயத்தை விளைவித்ததாக பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய மாணவி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரிட்டனில் இளங்கலைப் பட்டக்கல்வி பயின்ற எஸ்தர் டான், 24, சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி விமான நிலையத்தில் ஓர் உணவு நிலையத்துக்குச் சென்றார்.
அதன் பின்னர், அவர் கிளமெண்டியில் ஒரு மருந்தகத்துக்கும் சென்றார். அங்கு, தனது பயண விவரங்கள் பற்றி பொய் சொல்லி மருந்து வாங்கினார். அதன் பிறகு அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. அதையடுத்து அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

