சிங்கப்பூரர்கள் நேரத்தை பயன்படுத்தும் விதத்தை ஆராய $2.2 மி. செலவில் ஆய்வு

சிங்கப்பூரர்கள் நேரத்தை பயன்படுத்தும் விதத்தை ஆராய $2.2 மி. செலவில் ஆய்வு

1 mins read
7f486fee-9766-4843-897f-138881ddf60d
-

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக (எஸ்­யு­எஸ்­எஸ்) ஆய்­வா­ளர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் எவ்­வாறு தங்­கள் நேரத்­தைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள ஐந்­து­ஆண்­டு­கால ஆய்­வைச் செய்­யவுள்ளனர்.

அந்த ஆய்­வில் 1,000 குடும்­பங்­கள் அல்­லது 3,000 தனி­ந­பர்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என்று பல்­க­லைக்­க­ழ­கம் நேற்று நடந்த ஆய்­வு­நிதி வழங்­கும் நிகழ்ச்­சி­யில் தெரி­வித்­தது. அதில் இந்த ஆய்­வுக்­கான $2.2 மில்­லி­யன் நிதியை வழங்­கு­வ­தற்கு, தேசிய சமூக சேவை­கள் மன்­ற­மும் நீ ஆன் கொங்சி அமைப்­பும் ஓர் உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்­டன.

கொவிட்-19 பெருந்­தொற்று, அதன் கார­ண­மாக விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் ஆகி­ய­வற்­றால் சிங்­கப்­பூ­ரர்­களின் வழக்­க­மான செயல்­கள், சமூக நட­வ­டிக்­கை­கள், மூத்­தோ­ருக்­கும் பிள்­ளை­க­ளுக்­கு­மான பரா­ம­ரிப்பு போன்ற அம்­சங்­கள் எவ்­வாறு மாறி­யுள்­ளன என்­பதை அந்த ஆய்வு ஆரா­யும்.

சிங்­கப்­பூ­ர­ரர்­கள் வீட்­டி­லும் பள்ளி அல்­லது வேலை­யி­டத்­தி­லும் எவ்­வ­ளவு நேரத்­தைச் செல­வி­டு­கி­றார்­கள் என்­ப­தும் அது­கு­றித்த அவர்­க­ளின் எண்­ணப்­போக்­கும் ஆரா­யப்­படும்.

நேற்­றைய நிதி வழங்­கும் நிகழ்ச்­சி­யில் கல்வி, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­க­ளுக்­கான துணை அமைச்­சர் திரு­வாட்டி சன் சுவே­லிங் கலந்­து­கொண்­டார்.

கள நில­வ­ரத்தை அறிந்து கொண்டு நல்ல கொள்­கை­க­ளளை வகுக்க இந்த ஆய்வு அதி­கா­ரி ­க­ளுக்கு உத­வும் என்­றார் பல்­ கலைக்­க­ழ­கத்­தின் தலை­வர் திரு சியோங் யீ கியட்.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஒதுக்­கும் நேரத்­தைக் கொண்டு அவர்­கள் எந்த அம்­சங்­களை முக்­கி­ய­மா­கக் கருது­கி­றார்­கள் என்­ப­தைக் கணிக்­க­லாம் என்று ஆய்­வா­ளர்­கள் தெரிவித்தனர்.