பணிப்பெண் தள்ளிவிட்டதால் 85 வயது மூதாட்டியின் இடை எலும்பு முறிந்தது. குற்றவாளியான 41 வயது பணிப்பெண் மூதாட்டியின் குடும்பத்திற்கு சுமார் ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கியு கியு அய் என்ற அவருக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வேலைகளைச் செய்வது, மூதாட்டியைக் கவனித்துக்கொள்வது ஆகிய பொறுப்புகள் மியன்மாரைச் சேர்ந்த கியு கியு அய்க்கு இருந்தன.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதாட்டி வீட்டில் சமையலறைக்கு மெதுவாக நடந்து சென்றிருக்கிறார். கியு கியு அய் மூதாட்டியை வேகமாக நடக்கச் சொன்னார். அதற்கு பிறகு கோபமடைந்த அவர் மூதாட்டியைத் தள்ளிவிட்டார். மருத்துவமனையில் மூதாட்டியின் இடை எலும்பு முறிந்தது தெரியவந்தது.

