கழிவறையின் கதவை மூடாமல் குளிக்குமாறும் சன்னல்களைத் திறந்துவைத்தபடி ஆடைகளை மாற்றிக்கொள்ளுமாறும் தனது இந்தோனீசிய பணிப்பெண்ணைத் துன்புறுத்திய இல்லத்தரசிக்கு 15 மாதம் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணான திருவாட்டி மாயாங் சாரிக்கு 2,500 வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் குற்றவாளியான 33 வயது ரொஸ்டியானா அப்துல் ரஹிமிற்கு உத்தரவிடப்பட்டது.
தொகையைத் தரமுடியாவிட்டால், இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான ரொஸ்டியானா கூடுதலாக 11 நாட்கள் சிறையில் இருக்கவேண்டும். ரொஸ்டியானா மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் ஆறு நிரூபிக்கப்பட்டன. திருவாட்டி மாயாங் சாரியின் வயது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.