கலப்புமுறை வேலை ஏற்பாடு தொடர்ந்து நீடிக்கும்

கலப்புமுறை வேலை ஏற்பாடு தொடர்ந்து நீடிக்கும்

2 mins read
9c83828c-d260-406f-b68a-b64ed7e2d378
இணையச் சந்திப்புவழி 'டென்ட்டன்ஸ் ரோடிக்' சட்ட நிறுவனத்தார் பேசிக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அலுவலகத்திற்கு இன்றுமுதல் கூடுதல் ஊழியர்கள் திரும்ப அனுமதி

இன்­று­மு­தல் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­கிறது சிங்­கப்­பூர். மேலும் அதி­க­மான ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்­திற்­குத் திரும்ப, நிறு­வனங்­களுக்­கு அரசாங்கம் பச்­சைக் கொடி காட்­டியுள்ளது. இருப்­பி­னும், கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய உல­கத்­தின் ஒரு நிரந்­தர அம்­ச­மாக கலப்­பு­முறை வேலை ஏற்­பாடு இருக்­கும் எனப் பெரும்­பா­லான நிறு­வனங்­கள் எதிர்­பார்க்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் ஆகப் பெரிய அள­வில் இயங்­கும் நிறு­வ­ன­மான அர­சாங்­க­மும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

"கொவிட்-19க்குப் பின் உரு­வாகும் புதிய வழக்­க­நி­லைக்கு ஏற்ப, வேலை­யில் கூடு­தல் நீக்­குப்­போக்­குத் தன்­மையை ஆத­ரிக்­கும் நிலையை நோக்கி பொதுச் சேவை செயல்­பட்டு வரு­கிறது," என்­றார் பொதுச் சேவைத் துறை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர்.

"பொதுச் சேவை அதி­கா­ரி­களின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் அதே­வே­ளை­யில் அமைப்­பின் தேவை­களும் அதற்கு நிக­ரா­கப் பூர்த்­தி­யாக வேண்­டும்," என்­றார்.

கொள்­ளை­நோய்க்கு எதி­ரா­கச் செயல்­படும் அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு இரண்டு வாரங்­க­ளுக்­கு­முன் அறி­வித்­தி­ருந்­த­படி இன்­று­மு­தல், ஊழி­யர்­கள் வீட்­டில் இருந்­த­வாறு வேலை செய்­வது இயல்­பு­நிலை­யாக இருக்­காது.

அதற்­குப் பதி­லாக, தனித்து வேலை செய்­து­வந்த ஊழி­யர்­களில் 50 விழுக்­காட்­டி­னர் மீண்­டும் அலு­வ­ல­கத்­திற்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­ப­டு­வர். இந்­தச் சூழல் கடை­சி­யாக இவ்­வாண்டு மே மாதம் 8ஆம் தேதிக்கு முன் நில­வி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கண்­டறி­யப்­பட்­டது முதல் மிகுந்த சிர­மங்­க­ளு­டன் கலப்­பு­முறை வேலை ஏற்­பாட்டை நிறு­வ­னங்­கள் சாத்­தி­ய­மாக்க முயன்­றன. இத்­த­கைய ஏற்­பாடு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு ஓராண்­டுக்கு மேல் ஆகி­விட்ட நிலை­யில், பெரும்­பா­லான நிறு­னங்­க­ளுக்­கும் அவற்­றின் ஊழி­யர்­க­ளுக்­கும் அது பரிச்­ச­ய­மா­கி­விட்­டது.

வீட்­டில் வேலை செய்­வ­தற்­குக் குறிப்­பிட்ட சில நாட்­களை ஒதுக்­கு­வது, வேலை தொடங்­கும் நேரத்­தில் நீக்­குப்­போக்­குத்­தன்மை அனு­மதிப்­பது போன்ற அம்­சங்­களில் நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்­து­கின்­றன. இதற்­கி­டையே, ஊழி­யர்­களி­டையே ஒத்­து­ழைப்பை வளர்ப்­ப­தற்­காக அவர்­களை மீண்­டும் அலு­வ­ல­கத்­திற்கு அழைப்­ப­தா­கச் சில முத­லா­ளி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இருப்­பி­னும், இடத்­தை­யும் வேலை செய்­யும் பாணி­யை­யும் அதற்கு ஏற்ப மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்­றார் 'ரேன்ட்ஸ்­டேட் சிங்­கப்­பூர்' ஆள்­சேர்ப்பு நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர், மலே­சிய நாடு­க­ளுக்­கான நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி ஜெயா தாஸ்.