கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்தால் பள்ளி திரும்பலாம்

கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்தால் பள்ளி திரும்பலாம்

2 mins read
18ef0238-61b7-4718-a542-e98adbe03b18
-

கொவிட்-19 தொற்று கார­ணத்­தால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த மாண­வர்­கள், பள்­ளிப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோர் கட்­டாய விடுப்­பில் வைக்­கப்­ப­டு­வது வழக்­கம். இன்­று­மு­தல் இந்த நடை­மு­றை­யில் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வ­ருக்கு கொரோனா கிருமி இல்லை என்­பது பரி­சோ­த­னை­வழி உறு­தி­செய்­யப்­பட்­டால் அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் பள்ளி திரும்­ப­லாம்.

இது­வரை, கட்­டாய விடுப்பு காலம் முடி­யும்­வரை மாண­வர்­கள், பள்­ளிப் பணி­யா­ளர்­கள் வீட்­டி­லேயே இருக்­க­வேண்­டும். சூழ­லுக்கு ஏற்ப முடிவு செய்­யப்­ப­டு­வ­தால் இந்­தக் கட்­டாய விடுப்பு காலம் நப­ருக்கு நபர் மாறு­படும். உதா­ர­ணத்­திற்கு தனிமை உத்­த­ர­வில் வைக்­கப்­படும் குடும்ப உறுப்­பி­ன­ரால், அவ­ரு­டன் தொடர்­பில் இருந்த ஒரு மாண­வர் அல்­லது பள்­ளிப் பணி­யா­ளர் அந்த தனிமை உத்­த­ரவு முடி­யும்­வரை பள்ளி செல்­லக்­கூ­டாது.

மேலும், சுகா­தார அபா­யம் குறித்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட நிலை­யில் பள்­ளிக்­குப் போகக்­கூடாது என்ற நடை­மு­றை­யும் இனி மாற்­றம் காண்­கிறது. கொவிட்-19 தொற்று இல்லை என்­பதை அவர்­கள் உறு­தி­செய்­து­விட்­டால் பள்ளி திரும்­ப­லாம்.

இம்­மாற்­றங்­கள் தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப்­ பள்ளி, தொடக்கக்­கல்­லூரி, மில்­லெ­னியா கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றில் உள்ள மாண­வர்­க­ளை­யும் பள்­ளிப் பணி­யா­ளர்­க­ளை­யும் பாதிக்­கும் என்று பெற்­றோர்­க­ளுக்­குக் கல்வி அமைச்சு நேற்று அனுப்­பிய கடி­தத்­தில் தெரி­வித்­தி­ருந்­தது.

சமூ­கப் பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­களை சிங்­கப்­பூர் படிப்­படி­யா­கத் தளர்த்­து­வ­தற்கு ஏற்ப இம்­மாற்­றத்­தைக் கல்வி அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கல்வி அமைச்­சின் கடி­தத்­தின்­படி, இரு நிபந்­த­னை­களில் ஏதே­னும் ஒன்றை நிறை­வேற்­றி­னால் கட்­டாய விடுப்­பில் உள்­ள­வர்­கள் பள்ளி திரும்­ப­லாம் என்று குறிப்­பி­டப்­பட்­டது.

தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்ட நபர், ஓர் அர­சாங்­கப் பரி­சோ­தனை வளா­கத்­திற்­குச் சென்று கொவிட்-19 தொடர்­பான பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்த வேண்­டும். அல்­லது தனிமை உத்­த­ர­வில் வைக்­கப்­பட்ட மாண­வரோ பள்­ளிப் பணி­யா­ளரோ கொவிட்-19 தமக்கு இல்லை என்­பதை உறுதிப்­படுத்த வேண்­டும்.

சுகா­தார அமைச்சு குறுந்­த­கவல்­வழி அனுப்­பும் சுகா­தார அபாய எச்­ச­ரிக்கை தொடர்­பில் அமைச்சு விளக்­கம் அளித்­தி­ருந்­தது. கொவிட்-19 தொற்று தங்­க­ளுக்கு இல்லை என்­ப­தைப் பரி­சோ­தனை வழி அவர்­கள் உறு­தி­செய்­தால் அவர்­க­ளுக்­குத் தரப்­பட்ட விடுப்பு முடி­யும்­வரை காத்­தி­ருக்­கா­மல் உடனே பள்ளி திரும்­ப­லாம்.

இருப்­பி­னும், சளிக்­காய்ச்­சல் அறி­கு­றி­கள் உள்ள நிலை, அல்­லது வீட்­டில் உள்­ள­வர்­க­ளுக்­குச் சளிக்­காய்ச்­சல் அறி­கு­றி­கள் இருப்­பது போன்ற சூழல்­களில் கட்­டாய விடுப்­பில் இருக்க வேண்டிய கொள்­கை­யில் மாற்­றம் ஏது­மில்லை என்று அமைச்சு தெரி­வித்­தது.

சளிக்­காய்ச்­சல் அறி­கு­றி­கள் ஒரு­வ­ருக்கு இருந்­தால் அவர் தொடர்ந்து ஐந்து நாட்­க­ளுக்கு விடுப்­பில் செல்ல வேண்டும்.

வீட்­டில் உள்­ள­வ­ருக்­குச் சளிக்­காய்ச்­சல் இருந்­தால் கொவிட்-19 இல்லை என்று பரி­சோ­தனை உறுதி­செய்­யும்­வரை, மற்­ற­வர்­கள் வீட்­டி­லேயே இருக்­க­ வேண்­டும்.