தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் உள்ளூர் விமான நிறுவனங்கள்

தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் உள்ளூர் விமான நிறுவனங்கள்

1 mins read
9faef151-d419-4b56-8324-60555e9cbf94
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ), ஸ்கூட், ஜெட்ஸ்­டார் ஏஷியா ஆகிய உள்­ளூர் விமான நிறு­வனங்­கள் மூன்­றும் தங்­க­ளின் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளி­டையே தடுப்­பூ­சி­யைக் கட்­டா­ய­மாக்­கு­கின்­றன.

விமா­னி­கள், விமா­னச் சிப்­பந்தி­கள் ஆகி­யோர் செப்­டம்­பர் 1ஆம் தேதிக்­குள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் குழு­மம் நேற்று தெரி­வித்­தது.

டிசம்­பர் 1ஆம் தேதிக்­குள் தன் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்று ஸ்கூட் நிறு­வனம் தெரி­வித்­தது.

விமா­னி­கள், சிப்­பந்­தி­களில் 99 விழுக்­காட்­டி­ன­ரும் சிங்­கப்­பூரில் பணியாற்றும் முன்­க­ளப் பணி­யாளர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக குழு­மம் கூறி­யது.

இதற்­கி­டைய, ஜெட்ஸ்­டார் ஏஷியா, தன் ஊழி­யர்­கள் அனை­வரும் அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­குள் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தைக் கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளது.

அர­சாங்­கம் கடந்த மாதம் இரண்­டாம் தேதி­யன்று வெளி­யிட்ட ஆலோ­சனை அறிக்­கையின்­படி, உயர் கிருமி அபா­யம் உள்ள சூழ­லில் வேலை செய்­வோ­ருக்கு முத­லா­ளி­கள் தடுப்­பூ­சி­யைக் கட்­டா­ய­மாக்­க­லாம் என்று குறிப்­பிடப்­பட்­டது.

இதை­ய­டுத்து, கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னையை விதிக்­கும் முதல் சிங்­கப்­பூர் விமான நிறு­வ­னம் ஜெட்ஸ்­டார் ஏஷியா ஆகும்.

இந்­நி­லை­யில், அதன் ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட 100 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.