பிள்ளைகள் தங்களின் மனநலனைப் பேணுவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். பிள்ளைக்கு உணர்வுரீதியாகப் பிரச்சினை ஏற்படும்போது அதை முதலில் கவனிப்பவர்கள் பெற்றோரே.
இந்நிலையில், தங்களின் பிள்ளைகள் மனநல ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதைப் பெற்றோர் எவ்வாறு உறுதிசெய்யலாம் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அத்துடன் மனநலம் தொடர்பான தவறான எண்ணங்களையும் பெற்றோரால் களையமுடியும்.
பெற்றோர் தங்களது பிள்ளையின் மனநலம் தொடர்பில் தாங்களே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் உதவியையோ இணையத்தளங்களையோ நாடாமல், வீட்டில் ஆரோக்கியமான ஒரு சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோரும் அவர்களுக்கு அழுத்தம் தரக்கூடிய விவகாரங்கள் குறித்துப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் அவர்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும்.
சில சமயங்களில் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதைப் பிள்ளைகள் உணரும்போது அவர்களின் பாரம் சற்று குறைந்தது போல் இருக்கும். பிள்ளைக்குப் பிடித்தமான நடவடிக்கையில் அவரோடு சேர்ந்து ஈடுபடுவதும் ஓர் உத்தியாகும்.

