70,000 மத்திய சேம நிதி உறுப்பினர்களின் ஓய்வுக்கால கணக்கு
அடுத்த ஆண்டு ஜனவரியில் 70,000 மத்திய சேமநிதி உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் சுமார் $40 மில்லியன் நிரப்புத்தொகை வழங்கப்படும்.
வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில் வழங்கப்பட இருக்கும் இத்தொகை, இவ்வாண்டின் முதல் பகுதியில் ஓய்வுக்கால கணக்கில் செலுத்தப்பட்ட ரொக்க பண நிரப்புதலுக்காகனது.
இந்த நிரப்புத்தொகை மாதாந்தர ஓய்வுக்கால வழங்குதொகையை அதிகரிக்கும் என மத்திய சேமநிதி கழகம் தெரிவித்தது.
தற்போது நிடப்பில் இருக்கும் குறைந்தபட்ச ஓய்வுக்கால தொகையை அடைய சிரமப்படும் மூத்தோருக்கு உதவுவதற்கு இவ்வாண்டு தொடக்கத்தில், வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில், மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கில் தொகை நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் இந்த மானியம் வழங்கப்படும்.
தகுதி பெறும் உறுப்பினர்கள் செய்யும் ரொக்கப் பண நிரப்புதல் அரசாங்கத்தால் வெள்ளிக்கு வெள்ளி ஈடுசெய்யப்படும்.
ஆண்டிற்கு $600 வரம்பு கொண்ட இந்த ரொக்கப் பண நிரப்புதலை யார் வேண்டுமானாலும் தகுதி பெறும் உறுப்பினர்களுக்காகச் செல்லுத்தலாம்.
இத்திட்டம் தொடக்கத்திற்கு ஐந்தாண்டு காலம் (2025 வரை) நடப்பில் இருக்கும். தகுதி பெறும் உறுப்பினர்கள் ஜனவரி மாதத்தில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது அஞ்சல் முலம் தகவல் பெறுவர்.
440,000 பேர் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் இதிட்டத்திற்கு விண்ணபம் தேவையில்லை என்றும் மத்திய சேமநிதி கழகம் கூறியது.
இந்தத் திட்டம் அப்போது நிதி அமைச்சராக இருந்த ஹெங் சுவீ கியட்டால் சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டதில் அறிவிக்கப்பட்டது.
இது ஓய்வுக்காலத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படும் முதியோர்களுக்குக் குடும்பத்தினர் உதவுவதை ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

