நோய்த்தொற்று கட்டுபாடுகளுக்கு மத்தியில் பொருளாதாரம் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வெளிவந்த ஆக அண்மைய ஏலக்குத்தகையில் வாகன உரிமைச் சான்றிதழ் விலைகள் பெரும்பாலும் உயந்துள்ளன.
குறிப்பாக மக்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் கவனித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,899ஆக உயர்ந்து, என்றும் காண உயர்வை எட்டியது.
சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் 1.1% உயர்ந்து $45,689ஆனது. பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் 8.9% உயர்ந்து $61,001ஆனது.
சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தபோதும், அதன் சான்றிதழ் எண்ணிக்கை எதிர்பாராவிதமாக 6% குறைந்து $40,010ஆனது. நோய்த்தொற்றால் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையினால், வாடிக்கையாளர்கள் பொதுவாகத் தயக்கம் காட்டுகிறார்கள் எனப் பன்முக மோட்டார் குழுத் தலைவர் திரு நியோ நாம் ஹெங் சொன்னார். அவர், சரக்கு வாகனங்களின் விலை குறைந்ததற்கு நிறுவனங்கள் ஓரளவிற்கு மேல் கட்டணம் செலுத்த விரும்பாததே காரணம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசல் பயன்படுத்தும் வாகனங்களை நிறுவனங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வகை வாகனங்கள், வாகன உரிமைச் சான்றிதழை முன்னரே மாற்றிவிடும் திட்டத்திற்குத் தகுதி பெறுகின்றன.

