மைன்ஃபை எனும் உள்ளூர் மன
நலத் தளத்துக்கு முதலீட்டாளர்
களிடமிருந்து 750,000 அமெரிக்க டாலர் ($1.02 மில்லியன்) நிதி கிடைத்துள்ளது. நிதி வழங்கிய நிறுவனங்களில் ஐகுளோப் பார்ட்னர்ஸ், எம் வெஞ்சர் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டாளர்களும் அடங்குவர்.
மைன்ஃபைக்கு நிதி வழங்கிய தனிநபர்களில் வர்த்தகரான கோ பூன் ஹுவீயும் ஒருவர். அவருடன் பேட்ஸ்னேப் நிறுவனர் ஜெஃப்ரி தியோங், ஸொபிம் நிறுவனத்தின் இணை நிறுவனர் லிம் சிங் ரு, இன்குவெஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடாஷா ஃபூங். நிதி நிர்வாகி ஆகாஷ் டெக்வெகர், முன்னாள் தொழில்முனைவர் ஷடாப் ஃபரூக்கி ஆகியோரும் முதலீடு செய்துள்ளனர்.
ஒய் கம்பினேட்டரின் கோடைக்கால 2021 திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மைன்ஃபை தெரிவித்துள்ளது. மைன்ஃபையின் ஆலோசகராக யூனிகார்ன் நிறுவனத்தின் இணை நிறுவனர் திருவாட்டி எரிக்கா ஜான்சன் இணைகிறார்.
"மனநலப் பிரச்சினை என்றால் முகம் சுளிக்கும் காலம் போய்விட்டது. புதிய பயணத்தில் மைன்ஃபையின் முயற்சிகளுக்கு உதவ நான் ஆவலுடன் இருக்கிறேன். அதில் எனக்குப் பெருமையாக உள்ளது," என்றார் திருமதி ஜான்சன்.
கிடைத்துள்ள நிதியைப் பயன்
படுத்தி மனநல நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைக்க மைன்ஃபை திட்டமிட்டுள்ளது. ஒருவரின் தூக்கம், உணர்வு, மூச்சு, இதயத் துடிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பரிந்துரைகளை மைன்ஃபையின் தொழில்நுட்பம் முன்வைக்கிறது.
வழிகாட்டுதலுடனான சுய பராமரிப்புத் திட்டங்களையும் அது வழங்குகிறது. உதவி தேவைப்படுவோருக்குப் பயிற்றுவிப்பாளர்கள், சிகிச்சையாளர்கள் ஆகியோரை அது அறிமுகப்படுத்தி வைக்கிறது.
பயனீட்டாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் செயலியாக 2017ஆம் ஆண்டில் மைன்ஃபையை அதன் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜோர்ன் லீ தொடங்கிவைத்தார்.
மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் மூலம் இலவச உறுப்பியத்தை அது முதலில் வழங்கியது. இப்போது மைன்ஃபையின் வாடிக்கையாளர்களாக ஆசியாவைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் உள்ளன.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக மக்களிடையே பதற்றம் அதிகரித்திருப்பதால் மைன்ஃபையின் சேவைகள் தேவைப்படுவ
தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

