முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டை, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டை என நில இருப்பைப் பொறுத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புப் பேட்டைகள் தரம் பிரிக்கப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் எத்தனை ஆண்டு
களுக்கு முன்பு கட்டப்பட்டன என்பதை அடிப்படையாக கொண்டு அவை நிர்ணயிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகள் எனத் தரம் பிரிக்கும்போது அவ்விடங்களில் உள்ள வீடுகளின் விலை, வசதிகள் குறித்து வீடு வாங்க விரும்புபவர்களுக்கு ஓரளவுக்குப் புரிதல் இருக்கும்.
நேற்று முன்தினம் நிறைவுபெற்ற தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீவக வீடுகளுக்கான விற்பனையில் ஹவ்காங்கும் ஜூரோங் ஈஸ்ட்டும் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளாகத் தரம் பிரிக்கப்பட்டன.
இவ்விரு குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக வீடுகள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
"கூடுதல் வீவக வீடுகளைக் கட்ட போதுமான நிலம் இன்னும் இருக்கும் வட்டாரங்கள் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டை
களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
"புதிதாக வீவக வீடுகள் கட்ட நிலம் இல்லாத வட்டாரங்கள் முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளாக தெரிவிக்கப்படுகின்றன," என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.

