ஆகஸ்ட் 30 முதல் முன்னோடித் திட்டம்

ஆகஸ்ட் 30 முதல் முன்னோடித் திட்டம்

2 mins read
7bc528e7-e036-4fcd-a11b-40fe59849d78
-

கொவிட்-19 கிருமித்தொற்றால் இலே­சாக பாதிக்கப்படுபவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி­யி­லி­ருந்து வீட்­டி­லேயே குண­ம­டைய வழி­

வ­குக்­கும் இல்­லத் தனிமை முன்­னோ­டித் திட்­டத்தை சிங்­கப்­பூர் தொடங்­க­வி­ருக்­கிறது.

நோயு­டன் வாழும் நிலைக்கு படிப்­ப­டி­யாக மாறு­வ­தன் ஒரு பகு­தி­யாக இந்த முயற்சி எடுக்­கப்­

ப­டு­கிறது. குறைந்த வீரி­யத்­திலான கிரு­மித்­தொற்று உள்­ளோ­ரும் தொற்று கண்­ட­தற்­கான அறி­குறி தென்­ப­டா­த­வர்­களும் வீட்­டி­லேயே தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றும் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­று­வர் என சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

எனி­னும், அத்­த­கைய நோயா­ளி­களும் அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­களும் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளைப் பூர்த்­தி­செய்ய வேண்­டும். எடுத்­துக்­காட்­டாக, வீட்­டில் அனை­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

கர்ப்­பி­ணி­கள், மூத்­தோர், நோய் எதிர்ப்பு ஆற்­றல் குறை­வாக உள்­ளோர் ஆகிய எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டிய பிரி­வு­க­ளைச் சேரா­த­வர்­க­ளாக அவர்­கள் இருக்க வேண்­டும். உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் பரிந்­து­ரை­க­ளுக்கு ஏற்­ப­வும் இதர முன்­னே­றிய நாடு­க­ளின் சிறந்த நடை­மு­றை­க­ளுக்கு ஏற்­ப­வும் இந்­தத் திட்­டம் வகுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு கூறி­யது.

இது­கு­றித்து நேற்று மாலை மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய சுகாதார அமைச்­சர் ஓங் யி காங், கொவிட்-19 நோயு­டன் சேர்ந்து வாழப் பழ­கிக்­கொள்ள சிங்­கப்­பூர் முன்­னெ­டுக்­கும் பய­ணத்­தில் இத்திட்­டம் முக்­கிய படி என்று வர்­ணித்­தார்.

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைய தற்­போது இரு வகை­யான இடங்­கள் பயன்­ப­டுத்­தப்படு­ கின்­றன. மருத்­து­வ­மனை மற்­றும் சமூ­கப் பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­கள் ஆகி­யன அவை. புதிய முன்­னோ­டித் திட்­டம் மூலம் இந்த எண்­ணிக்கை மூன்­றாக அதி­க­ரிக்­கும்.

இலே­சான தொற்று கண்­ட­வர்­கள் வீட்­டி­லேயே தங்கி இருந்து குண­ம­டை­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டும்­போது மருத்­து­வ­மனை படுக்­கை­களும் இதர மருத்­துவ வளங்­களும் மிச்­சப்­படும் என்று சுகா­தார திரு ஓங் குறிப்­பிட்­டார்.

இலேசான தொற்று உள்ளோர் வீட்டிலேயே தங்கி குணமடையலாம்