ஜூரோங் மின்பிடித் துறை
முகத்தில் ஜூலையில் தொற்றுக் குழுமம் உருவெடுத்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால், சிங்கப்பூரில் தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்த நேரம் கிடைத்தது. அந்நடவடிக்கையால் கூடுதலானோர் தொற்று காரணமாக மரணமடைவதைத் தவிர்க்க முடிந்ததாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். "தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்
படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று எண்ணிக்கை குறைந்து வரு வதும் மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்
வதும் அதற்குக் காரணம்," என்று அவர் கூறினார்.

