பலரையும் பாதுகாக்க வேலையிட தடுப்பூசி பற்றிய வழிகாட்டுதல்கள் மறுஆய்வு: மனிதவள அமைச்சு

பலரையும் பாதுகாக்க வேலையிட தடுப்பூசி பற்றிய வழிகாட்டுதல்கள் மறுஆய்வு: மனிதவள அமைச்சு

2 mins read
65c00047-05dc-4aae-b928-0cd03f6efe65
-

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான பாது­காப்பை அதி­க­மா­னோ­ருக்கு வழங்­கும் நோக்­கில் ஊழி­யர்­க­ளுக்­கான தடுப்­பூசி வழி­காட்டி நெறி­மு­றை­கள் மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

கிரு­மிப் பர­வல் மிகுந்த சூழ­லில், தங்­க­ளது ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை முத­லா­ளி­கள் கட்­டா­ய­மாக்­க­லாம் என கடந்த மாதம் அமைச்சு வெளி­யிட்ட ஆலோ­ச­னைக் குறிப்பு தற்­போது மறு­ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் அமைச்சு தெரி­வித்­தது.

இறுதி செய்­யப்­பட்ட ஆலோ­ச­னைக் குறிப்பு விரை­வில் வெளி­யி­டப்­படும் என அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 விவ­கா­ரத்­தைக் கையா­ளும் அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட துறை­களில் 'தடுப்­பூசி அல்­லது அவ்­வப்­போது பரி­சோ­தனை' என்­னும் அம்­சம் தொடர்­பான அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.

வேலை­யி­டங்­கள் பாது­காப்­பா­ன­வை­யாக இருப்­பதை உறுதி செய்ய தடுப்­பூசி போடு­வதை அதி­க­ரிக்­கும் நோக்­கில் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் இந்த அறி­விப்பை மறு­ஆய்வு செய்­துவ வரு­வ­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­குள் தனது ஊழி­யர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என மலி­வுக்­கட்­டண விமான நிறு­வ­ன­மான 'ஜெட்ஸ்­டார் ஏஷியா' வெளி­யிட்ட அறி­விப்­பைத் தொடர்ந்து அமைச்சு இந்த விவ­ரங்­க­ளைக் கூறி­யுள்­ளது.

ஜூலை 2ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­புக்கு இணங்க, ஊழி­யர்­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை முத­லா­ளி­கள் கட்­டா­ய­மாக்­கக் கூடாது என மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் போன்ற முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர். தேசிய தடுப்பூசிக் கொள்கையும் இவ்வாறே வலியுறுத்து கிறது.

அதே­நே­ரம், கொவிட்-19 தொற்­றுக்­கான அபா­யம் அதி­க­முள்ள வேலை­யி­டங்­களில் புதி­தாக வேலைக்­குச் சேரு­வோர் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என முத­லா­ளி­கள் கோர­லாம். அல்­லது புதிய வேலை நிய­ம­னங்­க­ளுக்கான விளம்­ ப­ரங்­களில் தடுப்­பூ­சி­யை­யும் ஒரு நிபந்­த­னை­யாக அவர்­கள் விதிக்­க­லாம்.

குறிப்­பாக, தற்­போது பணி­யில் இருக்­கும் ஊழி­யர் எவரை­யும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­ப­வில்லை என்ற கார­ணத்­திற்­காக வேலை­யி­லி­ருந்து நீக்­கக்­கூ­டாது.

இந்­தச் சூழ­லில் 'தடுப்­பூசி அல்­லது அவ்­வப்­போது பரி­சோ­தனை' என்­னும் அம்­சத்தை சுகா­தார அமைச்சு ஆகஸ்ட் 6ஆம் தேதி அறி­வித்­தது.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட துறை­ளைச் சேர்ந்த முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் அல்­லது இரு வாரத்­திற்கு ஒரு முறை ஆன்­டி­ஜென் விரைவு பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­து­கிறது அந்த அம்­சம்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, உணவு மற்­றும் பானம், பொதுச் சேவை, டாக்சி, தனி­யார் வாடகை கார், விநி­யோ­கம் போன்ற துறை­கள் இந்த வரை­ய­றைக்­குள் வரு­கின்­றன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகையில் 77 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரம் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டோரின் விகிதம் 82 ஆகியுள்ளது.