தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 64 வயது சிங்கப்பூர் ஆடவர் கொவிட்-19 பிரச்சினைகள் காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியது. இவரையும் சேர்த்து இந்த மாதத்தில் மட்டும் ஒன்பது கொவிட்-19 மரணங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. மேலும் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ள 46வது கொவிட்-19 மரணம் இது. இம்மாதம் 2ஆம் தேதி ஆடவருக்கு இருமல் ஏற்பட்டது. மறுநாள் இதயப் பிரச்சினையும் ஏற்பட்டதால் ராஃ பிள்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருந்த
தாகத் தெரிய வந்தது. இறுதிக்கட்ட சிறுநீரகக் கோளாறு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக்
கொழுப்பு போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக அமைச்சு கூறியது. புதன் கிழமை நிலவரப்படி, கிருமித்தொற்றுக்காக 402 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.