ஜூரோங் தீவில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் வளங்களை நிர்வகிக்க புத்தாக்கமிக்க வழிகளை உருவாக்கியுள்ளன. செலவுகளைக் குறைத்து, நீடித்த நிலைத்தன்மையான சுற்றுச்சூழலுக்கான இலக்குகளை எட்ட அவை உதவுகின்றன.
ஜூரோங் தீவில் பல நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும் பொதுப் பயனீட்டு வசதிகள், சேவைகள், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றை நிர்வகிக்க உரிமம் பெற்றுள்ள செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதற்கு ஓர் உதாரணமாகும்.
தனது ஆலையை இயக்கு வதால் உண்டாகும் வெப்பம் வீணாவதைக் குறைக்கும் வழிகளைக் குறித்து செம்ப்கார்ப் ஆராய்ந்தது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஷங்ஹாயின் ஜியாவ் டோங் பல் கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மேம்பட்ட குளிரூட்டியை செம்ப்கார்ப் நிறுவனம் உருவாக்கியது.
கடல்நீரைக் கொண்டு ஆலையிலிருந்து வெளியேறும் வெப்பத்தை நீராக மாற்றுகிறது அக்குளிரூட்டி. அந்த நீர், ஜூரோங் தீவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீரைக் குளிர வைக்கப் பயன்படுகிறது. முன்பு 30% வெப்பம் மட்டுமே நீராக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது 60% வெப்பம் நீராக மாற்றப்படுகிறது.
தீவில் செயல்பட்டு வரும் எக்சோன்மோபில் நிறுவனம் அதன் வளாகத்திலிருந்து உண்டாகும் கழிவைக் குறைத்துள்ளது. அக்கழிவை மாற்றி நடைபாதைகளிலும் தோட்ட அமைப்பு களிலும் பயன்படுத்தும் வழிகளை அது ஆராய்ந்து வருகிறது.
மேலும், ஜூரோங் தீவில் கரியமிலத்தைக் குறைக்கும் வழிகளை தொழில்நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் எரிசக்தி நிலையம் உருவாக்கும்.

