சியூ ஜியா யிங், என்ற பெண், 2019ல் ஜூலை 24ஆம் தேதி வெஸ்ட் கேம்ப் ரோட்டில் அளவுக்கு அதிக வேகத்தில் கார் ஓட்டி வோங் வூ பாவ் என்ற சைக்கிளோட்டி மீது மோதிவிட்டார். அதனால் அந்த ஆடவருக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சியூ நன்னடத்தை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து அரசினர் தரப்பு வெற்றிபெற்றது.
நன்னடத்தைக் கண்காணிப்புக்குப் பதிலாக ஒரு சமூகத் தண்டனையாக, அந்தப் பெண் 14 நாட்கள் வரை சிறையில் தடுத்து வைக்கப்படுவார். இருந்தாலும் விடுதலையான பிறகு குற்றவியல் பதிவேட்டில் அவர் பெயர் இடம்பெறாது.
இதோடு மட்டுமின்றி, மூன்றுஆண்டுகள் வாகனம் ஓட்டக் கூடாது என்று சியூவிற்குத் தடையும் விதிக்கப்பட்டது. சியூவுக்கு இப்போது வயது 20 ஆகிறது.

