கடற்கொள்ளை, பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சியில் சிங்கப்பூர் கடற்படை

கடற்கொள்ளை, பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சியில் சிங்கப்பூர் கடற்படை

2 mins read
3ddd7291-8d77-423f-9627-ef8df73d449f
சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தகவல் பகிர்வு நிலையத்தின் நேரடி தகவல் பகிர்வு முறையை சேவையாளரும் அனைத்துலக பொது உறவு அதிகாரிகளும் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். படம்: தற்காப்பு அமைச்சு -

அமெ­ரிக்க கடற்­படை தலை­மை­யில் நடக்­கும் 'சீகேட்' என்ற கடற்­படை பயிற்­சி­யில் இதர 20 நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­ப­டை­யும் கலந்­து­கொண்டுள்ளது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கடற்­கொள்ளை, கடல் பயங்­க­ர­வா­தம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான வட்­டார ஆற்­றலை பெருக்­கு­வ­தற்­கான முயற்சி­க­ளின் ஒரு பகு­தி­யாக அந்­தப் பயிற்சி இடம்­பெ­று­கிறது. சீகேட் 10 நாள் பயிற்சி இன்­றுடன் முடி­வடை­கிறது. மலாக்கா மற்­றும் சிங்­கப்­பூர் நீரிணை­க­ளி­லும் தென்சீனக் கடலிலும் கப்­ப­லில் பலரும் ஏறு­வது போன்ற பாவ­னைப் பயிற்­சி­கள் அதில் உள்­ள­டங்­கும்.

கடந்த 2002ல் தொடங்­கிய அந்­தப் பயிற்சி இத்­து­டன் 20வது ஆண்­டாக நடக்­கிறது. இந்த ஆண்டு பயிற்­சி­யில் மூன்று நாள் கடற்­துறை பாது­காப்பு இணைய கருத்­த­ரங்­கம் இடம்­பெ­று­கிறது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கடல் துறை பாது­காப்பு மிரட்­டல்­களைக் கையா­ளு­வ­தற்­கான தலை­சி­றந்த யோச­னை­க­ளை­யும் நடை­மு­றை­களை­யும் அந்­தக் கருத்­த­ரங்­கில் பல வல்­லு­நர்­களும் விவா­திப்­பார்­கள், பகிர்ந்­து­கொள்­கிறார்­கள்.

இத­னி­டையே, இந்தப் பயிற்சி பற்றி தற்­காப்பு அமைச்சு நேற்று ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. இந்த முயற்­சி­கள் எல்­லாம் இந்த வட்­டா­ரத்­தில் கடல்­துறை பாது­காப்­பிற்கு விடுக்­கப்­படும் மிரட்­டல்­களை சமா­ளிப்­ப­தில் இடம்­பெ­றக்­கூ­டிய ஒன்­றி­ணைந்த முயற்­சி­களைப் பலப்­ ப­டுத்த உத­வும் என்றது அமைச்சு.

இப்பயிற்சி படிப்­ப­டி­யாக வலுப் பெற்றுள்ளது என்று சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யின் தக­வல் பகிர்வு நிலை­யத்­தின் தலை­வ­ரான எல்­டிசி லெஸ்­டர் யோங் கூறினார்.

இந்த ஆண்டு கொவிட்-19 கார­ண­மாக பல்­வேறு சவால்­கள் இருந்­தா­லும் தக­வல் பகிர்வு நடை­மு­றை­க­ளைத் தொடர்ந்து தாங்­கள் பரி­சோ­தித்து பார்ப்­ப­தா­க­வும் கடலில் செய­லாற்­றலை இந்­தப் பயிற்­சி­யின் மூலம் மேம்­ப­டுத்­து­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.