புரிந்துணர்வுக்கு கலந்துரையாடல் அவசியம்

புரிந்துணர்வுக்கு கலந்துரையாடல் அவசியம்

1 mins read
91bd0703-5a3c-4078-88f7-76e385d3571d
-

பலதரப்­பட்­ட கருத்­து­க­ளை அறிந்­து­கொள்­ள­வும் பரஸ்­ப­ரப் புரிந்­து­ணர்வை வளர்த்­துக்­கொள்­ளவும் முதிர்ச்சியான கண்­ணோட்­டங்­கள் கொண்ட கலந்­து­ரை­யா­டல்­கள் தொடர்ந்து இடம்பெற வேண்­டும் என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா நேற்று முன்தினம் கூறினார்.

மேலும், 20ஆண்­டு­க­ளுக்கு முன்பு பேச முடி­யா­தத் தலைப்பு­க­ளைப் பற்றி நம்­மால் இன்று பேச முடி­கிறது என்­றா­லும், நாம் தொடர்ந்து மதிப்­பு­ட­னும் மற்­ற­வர்­க­ளின் உணர்வு­க­ளுக்கு மரியாதை அளித்­தும் நடந்­து­கொள்ள வேண்­டும் என அவர் கூறி­னார். பயங்­க­ர­வா­தம் மட்­டு­மின்றி கருத்­தி­யல், சுமூ­க­வியல் பற்­றிய பெரு­கி­வ­ரும் சகிப்­புத் தன்மையின்மை, தீவி­ர­வா­தம் மற்றும் சமயச் சண்டைகள் ஆகிய சர்ச்­சை­களை­யும் சிங்­கப்­பூர் தொடர்ந்து சந்­தித்து வரு­வ தாக அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய தினத்தை முன்­னிட்டு சமூக நல்­லி­ணக்­கத்­தைக் கொண்­டாட 'ஹியு­மே­னிட்டி மெட்­டர்ஸ்' என்­னும் பல சமயக் குழு­வால் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட மாஜுலா கூட்­டம் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்ட நிதி மற்றும் தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி ராஜா, இக்­க­ருத்து­களைப் பகிர்ந்­து­கொண்­டார்.