ஆகஸ்ட் 28ஆம் தேதி தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தின் (டிஇஎல்) இரண்டாம் கட்ட திறப்பில், பயணிகள் அங்குள்ள கலைப் படைப்புகளில் மறைந்துள்ள 88 மிருகங்களைக் கண்டுபிடித்து, சுவாரசியமான விளையாட்டில் ஈடுபடலாம்.
அப்பர் தாம்சன் நிலையத்தில் நீண்டவால் குரங்குகளும் நாயும், மேஃபிளவர் நிலையத்தில் உள்ள 22 பறவைச் சிற்பங்களும் இவற்றுள் அடங்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 'ஆர்ட் இன் டிரான்சிட்' திட்டத்தில் இக்கலைப்படைப்புகள் ஆக அண்மையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளன.
1997ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், உள்ளூர் கலைஞர்களின் கலைப்படைப்புகளை எம்ஆர்டி நிலையங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்சமயம் 92 நிலையங்களில் பலதரப்பட்ட கலைப்படைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், புதிய நிலையங்களிலுள்ள நடைமுறை அம்சங்களால் பயணிகள் பயன்பெறுவர். சில இருக்கைகள் முழங்கைகளை வைத்துக்கொள்ளும் வசதியுடனும் சாய்ந்து அமர்ந்துகொள்ளும் வசதியுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. நிலையங்களிலுள்ள அறிவிப்புப் பலகைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கலைஞர்கள் ஒவ்வொரு நிலையத்தின் கலாசார வரலாற்றுத் தொடக்கங்களைத் தங்களது உத்வேகமாக அமைத்துக்கொண் டனர் என ஆணையம் குறிப்பிட்டது.

