தேசிய போதைப்பித்து விழிப்புணர்வு நாள்

தேசிய போதைப்பித்து விழிப்புணர்வு நாள்

2 mins read
8fb4114d-975f-4226-b9b2-3014d3835b46
-

ஆண்டுதோறும் புதிதாக 1,000 பேருக்குமேல் மது, போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்

தமது பதி­னைந்­தா­வது வய­தில் பொழு­து­போக்­காக போதைப்­பொ­ரு­ளை­யும் மது­வை­யும் தொட, நாள­டை­வில் திரு தாமஸ் கோ அதற்கு அடி­மை­யா­கி­விட்­டார்.

முப்­பது வய­தைக் கடந்­த­பின்­னும் நாள்­தோ­றும் அது நீடிக்­கவே, உடல்­ந­லக் கோளா­று­கள், மண­முறிவு, நொடித்­துப்­போ­கும் நிலை என்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு அது கார­ண­மா­னது.

அத­னை­ய­டுத்து, அப்­ப­ழக்­கத்­தில் இருந்து அவர் விடு­பட விரும்­பி­னார். அதற்கு குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வ­ர் ஆத­ர­வாக இருக்க, முதல் நட­வ­டிக்­கை­யாக மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று சிகிச்­சை­பெ­றத் தொடங்­கி­னார்.

இப்­போது 46 வய­தா­கும் திரு கோ, போதைப் பழக்­கத்­தி­லி­ருந்து முழு­மை­யாக விடு­பட்­டு­விட்­டார். அத­னு­டன் நின்­று­வி­டாது, மன­ந­லக் கழ­கத்­தின் தேசிய போதைப்பித்து நிர்­வா­கச் சேவை­யின் (நாம்ஸ்) துணை ஆலோ­ச­க­ரா­க­வும் உள்­ளார்.

தேசிய போதைப்பித்து விழிப்­பு­ணர்வு நாளை­யொட்டி, நேற்று மெய்­நி­கர் வழி­யாக நடந்த கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யின்­போது திரு கோ தமது கதை­யைக் கூறி­னார்.

போதைக்கு அடி­மை­யா­வது தொடர்­பி­லும் அறி­வி­யல் சார்ந்த வழி­களில் அதி­லி­ருந்து விடு­ப­டு­வதை ஊக்­கு­விப்­பது தொடர்­பி­லும் விழிப்­பு­ணர்வை ஊட்ட தேசிய போதைப்பித்து விழிப்­பு­ணர்வு நாள் இலக்கு கொண்­டுள்­ளது.

தீய பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யா­வ­தைப் பொறுத்­த­வரை, போதைப்­பொ­ரு­ளும் மது­வும் சிங்­கப்­பூ­ரில் முத­லிரு இடங்­க­ளைப் பிடித்­துள்­ள­தாக நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­தார். ஆண்­டு­தோ­றும் புதி­தாக 1,000 பேருக்­கு­மேல் அவற்­றுக்கு அடி­மை­யா­வ­தாக அவர் சொன்­னார்.

தீவிர உள்­நோ­யாளி நச்சு அகற்­றல் திட்­டங்­கள், நோயா­ளி­க­ளுக்­கும் அவர்­தம் குடும்­பத்­தார்க்­கு­மான வெளி­நோ­யாளி ஆத­ர­வுக் குழுக்­கள் போன்ற சேவை­கள் மூலம் போதை­யின் பிடி­யி­லி­ருந்து நோயா­ளி­களை விடு­பட வைப்­ப­தில் 'நாம்ஸ்' முக்­கி­யப் பங்­காற்றி வரு­வதாக டாக்­டர் ஜனில் குறிப்­பிட்­டார்.

2016 சிங்­கப்­பூர் மன­ந­லக் கருத்­தாய்­வின்­படி, மது­விற்கு அடி­மை­யா­னோர் நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் உதவி நாடி­ய­தை­யும் 2010ல் அந்­தக் கால அளவு 13 ஆண்­டு­க­ளாக இருந்­த­தை­யும் டாக்­டர் ஜனில் சுட்டிக்­காட்­டி­னார்.

ஆத­ரவு தேவைப்­ப­டு­வோர்க்­காக அழைப்­புச் சேவை எண்­க­ளை­யும் இணை­ய­வழி உரை­யா­டல் சேவை­களை­யும் ஏற்­ப­டுத்தி, சிங்­கப்­பூர் போதைப்­பொ­ருள் தடுப்­புச் சங்­கம், 'வி கேர்' சமூக சேவை­கள், சூதாட்­டப் பிரச்­சி­னைக்­கான தேசிய மன்­றம் போன்ற சமூ­கப் பங்­கா­ளி­கள் உதவி வரு­வ­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

"தீய பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யா­காத சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தி­லும் பாதிக்­கப்­பட்­டோர் அதி­ல் இ­ருந்து விடு­பட ஆத­ரவு அளிப்­பதி­லும் நாம் அனை­வ­ரும் நமது பங்கை ஆற்ற முடி­யும். தொடக்­கத்­தி­லேயே குறுக்­கி­டு­வது நல்ல பலன்களை அளிக்­கும்," என்று டாக்­டர் ஜனில் கூறி­னார்.

'ஒன்­றி­ணைந்து எதிர்­கொள்­வோம்' என்ற தலைப்­பில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி, 'நாம்ஸ்' சேவை­யின் யூடி­யூப் பக்­கம் வழி­யாக நேற்று ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. அதில், போதைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் தங்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். அடி­மை­ப் படுத்தும் போதைப்­பொ­ருள்­கள், நடத்தை மாற்­றங்­கள், மீட்­புச் சிகிச்­சை­கள் போன்­றவை தொடர்­பில் நிபு­ணர்­கள் பங்­கேற்ற கலந்­து­ரை­யா­ட­லும் இடம்­பெற்­றது.