முரசொலி
கொவிட்-19 தொற்று காரணமாக உலகத் தொடர்பு அறுபட்டு ஏறக்குறைய 18 மாதங்கள் ஓடிவிட்டன. அனைத்துலக பயணத்துறை சென்ற ஆண்டு மார்ச் முதல் இன்னமும் முடங்கியே கிடக்கிறது.
அது மட்டுமின்றி அந்தத் துறையுடன் தொடர்புடைய இதர துறைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்காலம் எப்போது என்பது விளங்காமல் இருட்டி லேயே இருந்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளின் எல்லைகள் திறக்கப்படவில்லை. அனைத்துலக பயணங்கள் தலை எடுக்கவில்லை. உலகத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த முழு முயற்சிகளை முடுக்கிவிட இன்னமும் காலம் கனியவில்லை.
சிங்கப்பூர் போன்ற உலகத் தொடர்புகளை மிக முக்கிய அடிப்படை தேவைகக் கொண்டுள்ள நாடுகள் நெடுநாட்களுக்கு தனது எல்லைகளை மூடியே வைத்திருப்பதை நினைத்துக்கூட பார்க்க இயலாது என்பதே உண்மை.
உலகத் தொடர்புகள் அறுபட்ட நிலையிலேயே இருந்து வந்தால் சிங்கப்பூரின் பொருளியல் வெற்றியும் அது உயிரோட்டமாக நீடிப்பதும் வாழ்க்கைத் தரமும் கேள்விக்குறிகிவிடும்.
இதில் அனைத்துலக பயணங்கள் மட்டுமின்றி உள்நாட்டுப் பயணத்துறையும் தலை எடுக்க வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கிறது.
சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறையும் அதன் தொடர்பான துறைகளும் 190,000 மக்களுக்கு வேலை கொடுக்கின்றன. சாங்கி விமான நிலையம் கொவிட்-19க்கு முந்தைய காலத்தில் கைண்ட பயணிகளில் வெறும் 3% பயணிகளை மட்டுமே இப்போது கைண்டு வருகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் குறைவாகவே சேவைற்றுகின்றன. அவற்றில் பயணம் செய்யும் பயணிகளும் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இந்த நிலை நீடிப்பது சிங்கப்பூருக்குத் தாங்காத ஒன்று.
அதோடு மட்டுமின்றி, ஆகாய தொழில்துறை, சுற்றுலா, விருந்தோம்பல் போன்ற தொடர்புடைய துறைகளும் படுத்தே கிடக்கின்றன.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை உலகுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. கட்டாயமானது என்றாலும் அதை மிகவும் எச்சரிக்கையுடன் செய்யவேண்டியது இப்போதைய சூழலில் அதைவிட தேவைனதாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் சிங்கப்பூர் மிகவும் விவேகமாக முடிவுகளை எடுத்து வருகிறது. நாட்டின் நலன்களை முன்னிறுத்தி பயணங்களை மறுபடியும் தொடங்க அது எச்சரிக்கையுடன் கூடிய அணுகுமுறையை மிகவும் கெட்டிக்காரத்தனமாக தொடங்குகிறது.
இதன் தொடர்பில் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஒன்றை சிங்கப்பூர் வெளியிட்டு உள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி முதல் முழுமைக தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர்வாசிகள் ஜெர்மனிக்குச் செல்லலாம். திரும்பி வரும்போதும் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
சிங்கப்பூர் சென்ற ஆண்டு மார்ச்சில் தனது எல்லைகளை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் சிங்கப்பூர்வாசிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முதன் முறைக இந்த வாய்ப்பு வருகிறது.
சிங்கப்பூர் தன் எல்லைகளைப் படிப்படிக பாதுகாப்பாகத் திறந்துவிட பரந்த அளவிலான ஒரு திட்டத்தை தீட்டி இருக்கிறது.
அதன்படி குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இங்கு வர அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டம் ஜெர்மனி, புருணை நாடுகளுடன் தொடங்குகிறது.
இந்தப் பரந்த திட்டத்தின்படி நாடுகளையும் வட்டாரங்களையும் நான்கு பெரும் பிரிவுகளாக சிங்கப்பூர் பிரித்துள்ளது. ஒவ்வொன்றிலும் கொவிட்-19 தொற்று ஆபத்து எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கருத்தில்கொண்டு அதற்கேற்ப வெவ்வேறான நடவடிக்கைகளை எடுப்பது திட்டம்.
வெளிநாடுகளில் இருந்து பயணிகளை அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில் எல்லை கடந்து கிருமி உள்ளே நுழைவதைத் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சிகளை சிங்கப்பூர் எடுத்து வருகிறது.
இங்கு வரும் பயணிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துகிறது. இதை அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் உடனடிக வரவேற்று இருக்கிறது.
உலக எல்லைகள் கடந்த ஒன்றரை ஆண்டாக மூடியே கிடக்கின்றன. கொவிட்-19 முதன்முதலாக தலைகாட்டியபோது உலகுக்கு அதைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அந்தக் கிருமியைப் பற்றிய பல விவரங்கள் உலகுக்குத் தெரியவந்துள்ளன.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிகப் பெரிய ஆயுதமாகக் கிடைத்து இருக்கிறது. உலக நாடுகளில் தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேம்பாடு கண்டு வருகிறது. கொரோனா கிருமி மிரட்டல் இன்னமும் முற்றாக ஒழிந்தபாடில்லை. என்றாலும் அதை ஒடுக்கிவிட முடியும் என்பதற்கான அறிகுறி தடுப்பூசி உதவியுடன் தெரியவந்துள்ளது.
இத்தகைய ஒரு நிலையில், அனைத்துலக பயணத்திற்கு ஏற்ற ஓர் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதே விவேகமானதாக இருக்கும். அறவே தொற்று இல்லாத ஒரு நிலை ஏற்பட்ட பிறகுதான் எல்லைகளைத் திறந்துவிடவேண்டும் என்று காத்திருப்பது இதில் அவ்வளவாகப் பயன் தரும் விவேக அணுகுமுறைக இருக்க முடிது.
அதற்குப் பதிலாக அனைத்துலக பயணத்திற்கு எல்லைகளைத் திறந்துவிடுவதில் தடுப்பூசி, தடமறிதல், பரிசோதனை ஆகிய அளவீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொவிட்-19 தொற்றைச் சமாளித்துவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
இதன் அடிப்படையில்தான் சிங்கப்பூர் பரந்த திட்டத்தைத் தீட்டி இருக்கிறது. இதில் கிடைக்கும் வெற்றி அனைத்துலக பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பது திண்ணம்.
இருந்தாலும் இத்தகைய ஏற்பாட்டின் வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்வோருக்கு மிக முக்கிய பொறுப்பு இருக்கிறது.
அவர்கள் பொறுப்புகளை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவில்லை என்றால் மேலும் இத்தகைய பயண ஏற்பாடுகள் சாத்தியமில்லாமல் போய்விடும். மற்றவர்கள் பயணம் மேற்கொள்ள கதவுகளை மூடவேண்டிய நிலை ஏற்படும்.
இவை ஒருபுறம் இருக்க, பொருளியலை வழமை நிலைக்கு மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்பதை எல்லாம் சிங்கப்பூர் வாசிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.