புருணைக்கு தடுப்பூசி

புருணைக்கு தடுப்பூசி

1 mins read
83ead410-7308-4f71-ac67-82c562388492
புரு­ணைக்­கான சிங்­கப்­பூர் தூதர் ஹெங் அய்க் இயாவ், (வலது) புருணை சுகா­தார அமைச்­சர் முகம்­மது இஷாம் ஜாஃப­ரி­டம் தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் 19ஆம் தேதி ஒப்­ப­டைத்­தார். படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிப்­ப­தற்­கான இரு­த­ரப்பு முயற்சி­க­ளின் ஒரு பகு­தி­யாக புரு­ணைக்கு 100,000 மொடர்னா தடுப்பூசி மருந்­தை சிங்­கப்­பூர் வழங்கி உள்­ளது.

அதை புரு­ணைக்­கான சிங்­கப்­பூர் தூதர் ஹெங் அய்க் இயாவ், புருணை சுகா­தார அமைச்­சர் முகம்­மது இஷாம் ஜாஃப­ரி­டம் ஒப்­ப­டைத்­தார் என்று வெளி­யு­றவு அமைச்சு நேற்று அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்றை ஒடுக்க அதிக ஒத்­து­ழைப்பு தேவை என் றும் பரஸ்­பர ஆத­ரவை நீட்­டிக்க வேண்­டுமென்றும் இரு அரசுகளும் கரு­து­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக தடுப்­பூசி மருந்து வழங்­கப்­படுவதாக அமைச்சு கூறியது.