கொவிட்-19: மோசமாகப் பாதிக்கப்பட்டோர் குறைவு

கொவிட்-19: மோசமாகப் பாதிக்கப்பட்டோர் குறைவு

2 mins read
1d5ce34e-bdc9-4d0e-8f0c-eb9b976c6b21
-

சிங்­கப்­பூ­ரில் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 நோயா­ளி­கள் எண்­ணிக்கை மூன்று வாரங்­களில் இல்­லாத அள­வுக்­குக் குறைந்­துள்­ளது.

மோச­மான பாதிப்­பு­டன், உயிர்­வாயு சிகிச்சை தேவைப்­படக்­கூடிய நோயா­ளி­கள் 22 பேர் இப்போது சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஏழு பேர் சிகிச்சை பெற்று வரு­வதாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட நோயாளி­க­ளின் எண்­ணிக்கை 29 ஆக இருக்­கிறது.

ஜூலை 28ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆகக் குறைவு. சென்ற மாதம் 28ஆம் தேதி­யன்று இத்­த­கைய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 25 ஆக இருந்­தது.

கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 23 பேர், 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­கள். இவர்­களில் 18 பேர் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளா­த­வர்­கள் அல்­லது முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள்.

இத­னி­டையே, கொவிட்-19 தொற்­றுக் குழு­மங்­க­ளின் எண்­ணிக்கை 76 ஆகக் குறைந்­தது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. ஜூலை 30ஆம் தேதிக்­குப் பிறகு இதுவே ஆகக் குறை­வான அள­வா­கும்.

இப்­போ­தைய 76 குழு­மங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 3 முதல் 1,155 வரை உள்­ளது.

ஜூரோங் மீன்பிடித் துறை­முகம்/ ஹோங் லிம் சந்தை தொற்­றுக்­ குழு­மமே ஆகப் பெரி­ய­தாக இருக்­கிறது.

இத­னி­டையே, இங்கு சனிக்­கி­ழமை சமூ­கத்­தில் புதி­தாக 32 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. இவர்­களில் 16 பேருக்கு கிருமி எப்­படி தொற்­றி­யது என்­பது தெரி­ய­வில்லை. தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளாத 70 வய­தைக் கடந்த ஒரு முதி­ய­வ­ரும் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஐந்து பேருக்குத் தொற்று இருந்­ததும் சனிக்­கி­ழமை தெரி­ய­வந்­தது.

சிங்­கப்­பூ­ரில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 364 பேர் மருத்­து­வ­மனை­களில் சிகிச்­சைப் பெற்று வந்­த­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் நன்கு குண­ம­டைந்து வரு­வ­தாக அமைச்சு கூறியது.