பணத்தின் அருமை பெருமை பற்றி பிள்ளைகளிடம் எடுத்துக் கூறி அப்போதைக்கு அப்போது விளக்குங்கள் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
வேலை பார்த்தால்தான் கடன் வாங்கலாம். அல்லது நிதிச் சேவை களைப் பெறலாம் என்ற பழைய நியதி எல்லாம் இனிமேல் பொருந்தாது. நிதித் துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் பல திட்டங்களைத் தீவிரமாகவும் புதுப்புது பாணியிலும் நடப்புக்கு கொண்டு வருவதே இதற்கான காரணம்.
இத்தகைய நிறுவனங்கள் 16 வயதுக்கும் குறைந்த சிறார் வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவைகளை அமலாக்கி செழிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, பதின்ம வயதினர் முன்னதாகவே பணம் நிரப்பப் பெற்ற அட்டைகளைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். அவற்றைக் கொண்டு கடைகளில் அவர்கள் பொருட்கள் வாங்கலாம்.
18 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள இளைஞர்கள், 'வாங்கி பிறகு செலுத்துங்கள்' என்ற ஏற்பாட்டின் மூலம் கடன்களைக் கூட பெறலாம். இத்தகைய கொடுக்கல் வாங்கல்களுக்குப் பொதுவாக பெற்றோர் சம்மதம் தேவையில்லை.
நிதித் துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுடன் இணையம் வழியாகவே தொடர்பு கொள்கின்றன.
சிறப்பு செயலிகள் மூலம் பரி வர்த்தனைகள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. இந்தச் செயலிகளை சிறார்களின் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இளைஞர்களும் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறார்கள். அவ்வளவாக கண்டிப்பு இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள், சொந்த வங்கிக் கணக்கைக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லது துணை வங்கிப் பண அட்டைகளைக் கூட அவர்கள் வைத்துள்ளனர். தங்கள் வங்கி வசதிகளைப் பயன்படுத்தி தங்களுடைய நண்பர்களுக்குக் கூட அவர்களின் பண அட்டையில் அவர்கள் தொகை நிரப்புகிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர்கள் 16 வயதுக்கும் குறைந்த தங்கள் பிள்ளைகளுக்கு வங்கி அட்டைகள், மின்னிலக்க பரிவர்த்தனை களைவிட கையில் ரொக்கமாகப் பணம் கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.
எப்படி பணம் புழங்குகிறது என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பெற்றோர்கள் பணத்தின் அருமை பற்றி, அதை எப்படியெல்லாம் வருமானத்திற்கு உட்பட்டு செலவழிக்க வேண்டும் என்பது பற்றி தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறீர்கள் என்பது பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்வதில் எந்த தவறும் இல்லை.
கடுமையாகப் பாடுபடுகிறீர்கள். சம்பளமும் குறைவு. இந்தச் சூழலில் இது பற்றி உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவிப்பதில் எந்த சங்கடமும் இல்லை. பெற்றோர் என்ற முறையில் உங்கள் பிள்ளைகளிடம் விவேகமான அணுகுமுறையைப் பலப்படுத்த வேண்டும்.
அதிக வருமானம் உள்ளவர்கள் என்றால் உங்கள் பிள்ளையிடம் பணத்தின் மதிப்பு பற்றி மேலும் பலவற்றையும் நீங்கள் போதிக்க வேண்டும். சரியான நியதிகளை பிள்ளைகளின் மனதில் பதிய வைத்துவிட்டால் பணத்தைச் செல வழிக்கும் முறை எப்படி இருந்தாலும் உங்களுக்குப் பிரச்சினை இருக்காது.

