உணவங்காடியில் புதிய முயற்சி

உணவங்காடியில் புதிய முயற்சி

1 mins read
853cfb6b-11d2-4589-9fac-0d0f9fab8ce8
கோவன் ஹவ்காங் உணவங்காடியில் தனது தட்டையும் கரண்டிகளையும் திரும்பி வைக்கும் வாடிக்கையாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோவன் ஹவ்­காங் உண­வங்­கா­டி­யில் உணவு உட்­கொண்ட பிறகு தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் திரும்பி வைக்­கு­மாறு பொதுச் சுகாதார மன்­றத்­தின் விழிப்புணர்­வுத் தூதர்­கள் பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.

மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி'சில்வாவின் தலைமையில் நேற்று காலை அந்த நிகழ்வு இடம்­பெற்றது.

கடந்த ஏப்­ரல் மாதம் தொடங்­கப்­பட்ட 'கீப் க்லீன், சிங்­கப்­பூர்!' எனப்­படும் மன்­றத்­தின் 'சுத்­த­மாக வைத்­தி­ருங்­கள், சிங்­கப்­பூர்!' இயக்­கத்­தின்­படி உணவு உட்­கொண்ட பிறகு தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் திரும்பி வைக்க மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். அத­னை­யொட்டி மன்­றத்­தின் தூதர்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இதைப் பற்றி நினை­வூட்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி­யி­லி­ருந்து உண­வங்­காடி­களில் உணவு உட்­கொண்ட பிறகு தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­களே திரும்­பிக் கொடுப்­பது கட்­டா­ய­மாக்­கப்­படும்.

பயன்­ப­டுத்­திய உறிஞ்­சிக் குழல்­கள், மெல்­லி­ழைத் தாள்­கள், உண்ட உண­வின் குப்பை ஆகி­ய­வற்­றை­யும் மேசை­யி­லி­ருந்து அகற்­ற­வேண்­டும். காப்­பிக் கடை­கள், உணவு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் உணவு உட்­கொள்­வோ­ருக்கு இந்த விதி­முறை இந்த ஆண்­டின் கடைசி காலாண்­டில் நடப்­புக்கு வரும்.

விதி­மு­றை­களை மீறு­வோர் மீது தேசிய சுற்­றுப்­புற வாரியம் நடவடிக்கை எடுக்­கும். முதன்­முறை­யாக விதி­மு­றை­களை மீறு­வோருக்கு எழுத்து வடி­வில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும்.

இரண்­டா­வது முறை­யாக இந்­தத் தவற்றைச் செய்­ப­வர்­க­ளுக்கு 300 அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அதற்­குப் பிற­கும் இவ்­வாறு நடந்­து­கொள்­ப­வர்­கள் நீதி­மன்­றத்­தில் அப­ரா­தம் செலுத்த நேரி­ட­லாம்.