வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூர் தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம் ஏற்பாடு செய்துள்ள இளையர் பட்டிமன்றப் போட்டியில் பங்கேற்க மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இந்தப் பட்டிமன்றப் போட்டி, இளையர்கள் (35 வயதிற்குக் கீழ்) தமிழில் சரளமாகப் பேசவும், தமிழை நேசிக்கவும் ஊக்குவிக்க நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகவோ, பெற்றோர்களாகவோ, குடும்பத் தலைவிகளாகவோ வேலை செய்பவர்களாகவோ இருக்கலாம்.
பங்கு பெறுவோர் சிங்கப்பூர் குடிமக்களாகவோ, நிரந்தரவாசி களாகவோ இருக்கவேண்டும்.
போட்டியாளர்கள் பண்பாடு, மொழி, சமூக மேம்பாடு, இன நல்லிணக்கம் போன்ற தற்போதைய விவகாரங்கள் பற்றிய தலைப்புகளில் விவாதிப்பார்கள்.
விவாதம் போட்டி 'நாக் அவுட்' முறையில் ஏற்பாடு செய்யப்படும். போட்டி 'ஸூம்' தளத்தில் நேரலை யாக நடத்தப்படும்.
நீதிபதிகள் போட்டியாளர்களை அவர்களின் தமிழ் உச்சரிப்பு, தெளிவான கருத்து, எளிய பேச்சுத் தமிழ், விவாதத்திறமை, குறுக்கு விசாரணைத் திறன்கள் மற்றும் தலைமைத்துவ குணங்களின் வெளிப்பாடுகள் முதலியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
நீதிபதிகளின் முடிவே இறுதி யானது. போட்டிக்குப் பதிவு செய்ய இறுதிநாள் 28.8.2021.
அதற்கான பதிவினை https://forms.gle/Ba5ofSyqLg7xmryN9 தளம் மூலம் அனுப்பலாம்.
தகுதிபெறும் இரண்டு குழுக்களிடையே முதலாம், இரண்டாம் இடத்திற்கான இறுதி போட்டி 12.9.2021 அன்று நடை பெறும்.
வெற்றி பெறும் குழுவுக்கு வெற்றிக்கோப்பையுடன் $1000 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு பரிசளிக்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவருக்கு $500 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு அளிக்கப்படும்.சிறந்த பேச்சாளர்களுக்குச் சான்றி தழ்கள் அளிக்கப்படும்.
மேல் விவரங்களுக்கு: https://tamilsitsociety.sg/Patti-manram/ அல்லது 8949 5929 எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம்.

