சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் உணவகங்கள் உள்ளூர் பண்ணை உணவை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தன. இப்போது நிலைமை மாறிவருகிறது.
'ஓப்பன் ஃபார்ம் கொம்யூனிட்டி', 'லேபிரிந்த்' உள்ளிட்ட உணவகங்கள் அவற்றில் அடங்கும்.
குறிப்பாக சிங்கப்பூரின் உணவு உற்பத்தியாளர்களை ஆதரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உணவைத் தயாரிக்கும் நோக்குடன் பல உணவகங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் உள்ளூர் பண்ணை உரிமையாளர்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைப் புரியவைத்ததாக சில உணவக உரிமையாளர்கள் சொல்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் தேவையான உணவுப் பொருட்களில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்கும் இலக்கை சிங்கப்பூர் அரசாங்கம் கொண்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு பல உணவகங்கள் செயல்படுகின்றன.

