தனது உணர்வுகளைக் கவனித்துக்கொள்ளும் ஆற்றல் வளர, ஒருவர் அவற்றை நன்கு உணர்ந்திருக்கவேண்டும்.
அதோடு, உணர்வுகளைப் பற்றிப் பிறரிடம் பேசத் தயாராய் இருக்கவேண்டும் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் இடம்பெற்ற கட்டுரை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எதிர்மறையானதாகக் கருதப்படும் உணர்வுகளைப் பலர் வெளிப்படுத்தத் தயங்குவதுண்டு.
இதனால் ஏமாற்றம், சோகம் போன்ற உணர்வுகளை மனத்திற்குள்ளே வைத்துக்கொள்வதுண்டு.
இது குறித்து இளம் வயதிலேயே கூடுதல் விழிப்புணர்வு இருந்திருந்தால் அது கைகொடுத்திற்கும் என்றும் சிலர் நினைப்பார்கள்.
இத்தகைய உணர்வுகளைப் பற்றிப் பிறரிடம் பேசுவது என்பது பலருக்கு எளிதான ஒன்று அல்ல.
இளையர்களிடையே தனிமை உணர்வு, மன அழுத்தம், வன்முறைச் செயல்களில் ஈடுபவது போன்ற பிரச்சினைகளை சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் எதிர்நோக்கிவருகின்றன.
அதனால் உணர்வுகளைக் கண்காணித்துக் கையாளும் ஆற்றல் இளம் வயதிலேயே வளரவேண்டும். மாணவர்கள் உணரும் வகையில் பள்ளிகள் அவர்களிடம் மதிப்பும் அக்கறையும் காட்டவேண்டும் என்று டேனியல் கோல்மன் என்ற மனோதத்துவ நிபுணர் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டதாகக் கட்டுரை தெரிவித்தது.
வீட்டிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

