கொலை வழக்கு: மாணவனுக்கு மேலும் ஒருவாரம் தடுப்புக்காவல்

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 16 வயதான ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கான மனநல மதிப்பீடு முடிந்துவிட்டது.

இதனையடுத்து, அவன் மேலும் ஒருவார காலத்திற்கு போலிஸ் காவலில் வைக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டது.

அவனுடைய குடும்பத்தினர் அவனுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை போலிஸ் மேற்கொள்ளும் என்று அரசாங்கத் தரப்பு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 24) தெரிவித்தது. காணொளி வழியாக இன்று அவன் விசாரணையில் முன்னிலையானான்.

கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளிக் கழிவறையில் வைத்து 13 வயது மாணவன் ஒருவனைக் கொலை செய்ததாக அந்தப் பதின்ம வயது இளையர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதை அடுத்து, 2019ஆம் ஆண்டில் அவன் மனநலக் கழகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவன் சார்பில் வழக்கறிஞர் சுனில் சுதீசன் வாதாடுகிறார்.

இந்த வழக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!