'சில்லறை வர்த்தகத் துறை மின்னிலக்கமயமாவது முக்கியம்'

'சில்லறை வர்த்தகத் துறை மின்னிலக்கமயமாவது முக்கியம்'

2 mins read
72ca13d8-221b-447f-a1a2-b50045d5f043
மின்னிலக்க முறையைப் பயன்படுத்தி சார்ல்ஸ் அண்ட் கீத் நிறுவனம் செயல்படுவதைப் பார்வையிட்ட அமைச்சர் கான் கிம் யோங் (நடுவில்), துணை அமைச்சர் லோ யென் லிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா நெருக்­க­டி­நி­லைக்கு முன்பே உள்­ளூர் காலணி வர்்த்­தக நிறு­வ­ன­மான சார்ல்ஸ் அண்ட் கீத், இணை­யம் மூலம் வர்த்­த­கம் செய்­யத் தொடங்­கி­விட்­டது.

கொவிட்-19 சூழ­லில் தனது மின்­னி­லக்­க­ம­ய­மா­கும் திட்­டத்தை அது விரை­வு­ப­டுத்­தி­யது.

தற்­போது தனது 7,000 ஊழி­யர்­க­ளுக்கு அது இணை­யம் மூலம் பயிற்சி அளித்து வரு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது, இணை­யம் மூலம் உல­கெங்­கும் உள்ள மொத்த வியா­பா­ரி­க­ளு­டன் அது வியா­பா­ரம் செய்­கிறது. வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங்­கும் தை செங் வட்­டா­ரத்­தில் உள்ள அந்­நி­று­வ­னத்­தின் தலை­மை­ய­கத்­துக்கு நேற்று சென்­ற­னர். நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கத்­திற்கு நேரில் சென்று

பார்­வை­யிட்ட பிறகு, காணொளி மூலம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் கான் பேசி­னார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பே சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட்­டன.

"ஆனால் தற்­போது கொவிட்-19 சூழல் அத்­து­றை­யின் உரு­மாற்­றத்தை விரை­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

"வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பார்வை­ யில் தொடர்ந்து இருக்க, சில்­லறை வர்த்­த­கத் துறைக்கு மின்­னி­லக்­க­ ம­ய­மா­தல் பெரி­தும் கைகொ­டுக்­கிறது. சில்­லறை வர்த்­த­கத் துறை நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­க­ளைத் துரி­தப்­ப­டுத்­த­வும் நீக்­குப்­போக்­கு­டன் இயங்­க­வும் அது வகை செய்­கிறது," என்று அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் தனது நிறு­வ­னத்­துக்­குப் பலன் தந்­துள்­ள­தாக சார்ல்ஸ் அண்ட் கீத் நிறு­வ­னத்­தின் உத­வித் தலைமை மேலா­ளர் திரு பிரெண்­டன் ஓங் தெரி­வித்­தார். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு தனது தலை­மை­ய­கத்­துக்கு ஆண்­டுக்கு நான்கு முறை மொத்த வியா­பா­ரி­கள் திரண்­ட­தாக அவர் கூறி­னார். ஆனால் இந்த அணு­கு­முறை கடந்த மார்ச் மாதம் நிறுத்­தப்­பட்­டது.

இருப்பினும், அதே மாதத்­தில் விற்­பனை செய்­யப்­படும் கால­ணி­களை இணை­யம் மூலம் 360 டிகிரி கோணங்­களில் மொத்த வியா­பா­ரி­ கள் பார்க்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அதை­ய­டுத்து, காலணி வடி­

வ­மைப்­பா­ளர்­கள் வர்த்­த­கர்­க­ளு­டன் காணொளி மூலம் பேசி­ய­தாக அவர் கூறி­னார். இந்த மின்­னி­லக்க அணுகுமுறை சவால்­மிக்­க­தாக இருந்­தா­லும் தேவை­யான உத­வி­களை அர­சாங்­கம் வழங்­கும் என்­றார் அமைச்­சர் கான். ஊழி­யர்­

க­ளின் மின்­னி­லக்­கத் திறன்­களை மேம்­ப­டுத்த நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்ய வேண்­டும் என்­றார் அவர்.