பகுதிநேர இல்லச் சேவைத் திட்டம் நிரந்தரமாக்கப்படுகிறது

பகுதிநேர இல்லச் சேவைத் திட்டம் நிரந்தரமாக்கப்படுகிறது

1 mins read
8a26d9d8-a131-44e7-9d83-a2b153e60b5c
-

பகு­தி­நேர இல்­லச் சேவைத் திட்­டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து நிரந்­த­ர­மாக்­கப்­ப­டு­கிறது.

இல்­லத் துப்­பு­ர­வுச் சேவை­கள் போன்­றவை இதில் அடங்­கும்.

இத்­திட்­டம் மூலம் பகு­தி­நேர இல்­லத் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­

க­ளின் சேவை­க­ளைப் பயன்­

ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இத்­த­கைய சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மனி­த­வள அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

இல்­லச் சேவைத் திட்­டம் 2017ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்­டது. முத­லில் அதில் 15 நிறு­வ­னங்­கள் பங்­கெ­டுத்­தன. தற்­போது இந்த எண்­ணிக்கை 76ஆக உயர்ந்­துள்­ளது.

இந்த 76 நிறு­வ­னங்­களும் 10,000க்கும் மேற்­பட்ட வீடு­க­ளுக்­குத் தங்­கள் சேவை­களை வழங்கு­ கின்­றன. இல்­லத் துப்­பு­ர­வுப் பணி­க­ளு­டன் மளி­கைப் பொருட்­களை வாங்க உத­வு­வது, வாக­னங்­க­ளைக் கழு­வு­வது, செல்­லப் பிரா­ணி­க­ளைப் பார்த்­துக்­கொள்­வது போன்ற சேவை­களை வழங்க இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்கப்பட்டுள்ளது.