மனநலப் பிரச்சினைக்கு உதவி கோர 82 விழுக்காட்டினர் தயார்

மனநலப் பிரச்சினைக்கு உதவி கோர 82 விழுக்காட்டினர் தயார்

2 mins read
6f43da0e-bf16-494e-9610-2fc80a7a2192
-

கொவிட்-19 கால­கட்­டத்­தில் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­டோ­ரி­டம் மன­ந­லக் கழ­கம் நடத்­திய ஆய்வு ஒன்­றில், அவர்­களில் கிட்­டத்­தட்ட 13 விழுக்­காட்­டி­ன­ரி­டம் மனக்­க­லக்­கம் அல்­லது மன­உ­ளைச்­ச­லுக்­கான அறி­குறி­கள் இருந்­தது தெரி­ய­வந்­தது.

ஆயி­னும், கொரோனா கிருமி தொடர்­பான மன­ந­லப் பிரச்­சி­னை­களுக்கு நிபு­ணத்­துவ உதவி நாடத் தயா­ராக இருப்­ப­தாக அவர்­களில் 81.8 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆய்­வின் முதற்­கட்ட முடி­வு­கள், நேற்று நடந்த 'சிங்­கப்­பூர் மன­ந­லக் கருத்­த­ரங்கு 2021' நிகழ்ச்­சி­யின்­போது வெளி­யி­டப்­பட்­டன.

ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து 2020 முதல் முதல் இவ்­வாண்டு ஜூன்­வரை நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வில், 1,058 சிங்­கப்­பூர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் பங்­கேற்­ற­னர்.

அவர்­களை நேர்­கண்­ட­தற்கு இரு வாரங்­க­ளுக்­கு­முன், 8.7 விழுக்­காட்­டி­னர் மன­உ­ளைச்­ச­லுக்­கான அறி­கு­றி­க­ளை­யும் 9.4 விழுக்­காட்­டி­னர் மனக்­க­லக்­கத்­திற்­கான அறி­கு­றி­க­ளை­யும் கொண்­டி­ருந்­த­னர். 4.8 விழுக்­காட்­டி­னர்க்கு இவ்­விரு பிரச்­சி­னை­க­ளுமே இருந்­தன.

மேலும், 9.3 விழுக்­காட்­டி­னர்க்கு மித­மா­னது முதல் கடு­மை­யான மன­அ­ழுத்­த­மும் 7.6 விழுக்­காட்­டி­னர்க்கு உறக்­க­மின்மை பிரச்­சி­னை­யும் இருந்­தன.

ஆய்வு முடி­வு­கள் சிங்­கப்­பூ­ரில் மன­ந­லப் பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைக் குறிப்­பி­டு­கின்­ற­னவா என்று கேட்­ட­தற்கு, ஆய்வு முடிவு­களைத் துல்­லி­ய­மாக ஒப்­பு­நோக்கு­வதற்­கான புள்­ளி­வி­வ­ரங்­கள் இப்­போ­தைக்கு இல்லை என்று மன­நலக் கழக மருத்­துவக் குழுவின் (ஆய்வு) துணைத் தலை­வர் டாக்­டர் மைதிலி சுப்­பி­ர­ம­ணி­யம் கூறி­னார்.

அதே வேளை­யில், கொவிட்-19 பர­வ­லுக்­கு­முன் மன­ந­லக் கழ­கம் 350 பேரி­டம் நடத்­திய ஆய்­வில், கிட்­டத்­தட்ட மூன்று விழுக்­காட்­டி­ன­ரி­டம் மனக்­க­லக்­கத்­திற்­கான அறி­கு­றி­களும் ஆறு விழுக்­காட்­டி­ன­ரி­டம் மன­உ­ளைச்­ச­லுக்­கான அறி­குறி­களும் காணப்­பட்­ட­தாக டாக்­டர் மைதிலி குறிப்­பிட்­டார். அந்த ஆய்வு முடி­வு­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இவ்­விரு புள்­ளி­வி­வ­ரங்­க­ளை­யும் ஒப்­பி­டு­வது கடி­னம் என்ற அவர், "உறு­தி­யாக, மன­ந­லப் பிரச்­சினை கூடி­யி­ருப்­ப­து­போல் தோன்­று­கிறது," என்­றார்.

குடும்ப உறுப்­பி­னர்­கள் அல்­லது நண்­பர்­களை கொரோனா தொற்றி­வி­டக்­கூ­டிய அபா­யம், பண இழப்பு, வேலை­வாய்ப்­பின்மை ஆகிய மூன்று விஷ­யங்­களே மன­அ­ழுத்­தத்­திற்­கான முக்­கி­யக் கார­ணி­க­ளா­கப் பங்­கேற்­பா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

இருந்­த­போ­தும், 81.8 விழுக்­காட்­டி­னர் மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­காக உத­வி­நாட தயா­ராக இருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தாக உள்­ளது என்றும் அது நல்ல விஷ­யம்தான் என்­றும் டாக்­டர் மைதிலி கூறி­னார்.

அதே நேரத்­தில், அந்­தத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் சிங்­கப்­பூர் தனது செய­லாற்­றலை அதி­க­ரிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.

"பெரும்­பா­லும் தனியார் மருத்­து­வர்­க­ளி­டம் ஆலோ­ச­கர்­க­ளி­ட­மும்­அவர்­கள் செல்ல விரும்­பு­வர். ஆகை­யால், அப்­பி­ரி­வி­னர்க்கு ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும்," என்­றார் டாக்­டர் மதிலி.

பங்­கேற்­பா­ளர்­கள் விரை­வில் மீண்­டெ­ழ­வும் அவர்­கள் மன­உளைச்­ச­லா­லும் மன­அ­ழுத்­தத்­தா­லும் பாதிக்­கப்­படும் வாய்ப்­பைக் குறைக்­க­வும் சமூக ஆத­ரவு போன்­றவை கைகொ­டுப்­ப­தாக ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, சமூக, நிறு­வன ரீதி­யான ஆத­ரவு, நிபு­ணத்­துவ ஆத­ரவு கிடைக்க வழி­வ­கை­யின் அவ­சி­யத்தை டாக்­டர் மைதிலி குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மன­ந­லத்­தில் கொவிட்-19 குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது. நாம் மீள்­தி­ற­னு­டன் கூடிய சமு­தா­யத்­தைக் கொண்­டுள்­ளோம். ஆனால், மீள்­தி­ற­னா­னது தனிப்­பட்ட ஒரு­வரின் பொறுப்­பல்ல என்­பதை நாம் உணர வேண்­டும்," என்று அவர் சொன்­னார்.