கொலை வழக்கு: மாணவனுக்கு மேலும் ஒருவாரம் தடுப்புக்காவல்

கொலை வழக்கு: மாணவனுக்கு மேலும் ஒருவாரம் தடுப்புக்காவல்

1 mins read
ce8a0725-65eb-4b33-849b-065d0b77b3e4
-

கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்ள 16 வய­தான ரிவர்­வேலி உயர்­நி­லைப் பள்ளி மாண­வ­னுக்­கான மன­நல மதிப்­பீடு முடிந்­து­விட்­டது. இத­னை­ய­டுத்து, அவன் மேலும் ஒரு வார காலத்­திற்கு போலிஸ் காவ­லில் வைக்­கப்­ப­டு­வான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­னு­டைய குடும்­பத்­தி­னர் அவ­னு­டன் பேசு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை போலிஸ் மேற்­கொள்­ளும் என்று அர­சாங்­கத் தரப்பு நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தது. காணொளி வழி­யாக நேற்று அவன் விசா­ர­ணை­யில் முன்­னி­லை­யா­னான்.

கடந்த மாதம் 19ஆம் தேதி பள்­ளிக் கழி­வ­றை­யில் வைத்து 13 வயது மாண­வன் ஒரு­வ­னைக் கொலை செய்­த­தாக அந்­தப் பதின்ம வயது இளை­யர்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

தன்­னு­யிரை மாய்த்­துக்­கொள்ள முயன்­றதை அடுத்து, 2019ஆம் ஆண்­டில் அவன் மன­ந­லக் கழ­கத்­தால் மதிப்­பீடு செய்­யப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவன் சார்பில் வழக்கறிஞர் சுனில் சுதீசன் வாதாடுகிறார்.

இந்த வழக்கு இம்­மா­தம் 31ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.