கழிவுநீர்க்குழியிலிருந்து பெரும் சத்தத்துடன் வெளிப்பட்ட தீப்பிழம்பு

கழிவுநீர்க்குழியிலிருந்து பெரும் சத்தத்துடன் வெளிப்பட்ட தீப்பிழம்பு

2 mins read
36e1cd06-94d2-40ec-8c84-54bff3b026c6
தீப்பிழம்பு வெளிப்பட்ட நிகழ்வில் ஒருவரும் காயமடையவில்லை. இந்நிகழ்வு தற்செயலாக ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படங்கள்: சேம் டான்/ஃபேஸ்புக், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

துணை போலிஸ் அதி­கா­ரி­யான திரு மர்ட்­ஸுக்கி மேட்­னர் நேற்­றுக் காலை­யில் பெரும் வெடிப்­புச் சத்­தத்­தைக் கேட்­ட­போது, எது­வும் தவ­றாக நடந்­தி­ருக்­காது என்று நினைத்­தார்.

அவ்­வே­ளை­யில் புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் பகு­தி­யில் கன­மழை பெய்­து­கொண்­டி­ருந்­தது. காலை 6 மணி­யில் இருந்தே அவ்­வப்­போது இடிச்­சத்­த­மும் கேட்­டது.

ஆயி­னும், புளோக் 439Bன் மூன்­றாம் தளத்­தில் வசிக்­கும் 42 வய­தான திரு மர்ட்­ஸுக்கி, வாட்ஸ்­அப்­, ஃபேஸ்புக்­கி­ல் பகி­ரப்­பட்ட காணொ­ளி­யைப் பார்த்த பிறகே வெடிப்பு நிகழ்ந்­ததை உணர்ந்­தார்.

அங்­குள்ள ஒரு அடுக்­கு­மாடி கார் நிறுத்­தப் பூங்­கா­வின் தரைத் தளத்­தில் இருக்­கும் ஒரு கழிவுநீர்க் குழியில் இருந்து தீப்­பிழம்பு வெளிப்­பட்­டதை அவ்வழியாகச் சென்ற ஒரு காரின் புகைப்­ப­டக்­கரு­வி­யில் பதி­வான அக்காணொளி காட்­டி­யது.

"வெடிப்பு நிகழ்ந்த இடத்­திற்கு அருகே அந்த கார் இருந்­தது. சரி­யாக அதே இடத்­தில் அந்த கார் சென்­றி­ருந்­தால், அதன் ஓட்­டு­நர் காய­ம­டைந்து இருக்­கக்­கூ­டும்," என்­றார் திரு மர்ட்­ஸுக்கி.

புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட், புளோக் 439ல் இருக்­கும் ஒரு கழிவுநீர்க் குழியிலிருந்து நேற்­றுக் காலை திடீ­ரென வெடிப்பு நிகழ்ந்து, தீப்­பிழம்பு வெளிப்­பட்­டது குறித்து காலை 9.10 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

இத­னால் தீ விபத்து எது­வும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் ஒரு­வ­ரும் காய­முற்­ற­தா­கத் தக­வல் இல்லை என்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

"அச்­சம்­ப­வம் தற்­செ­ய­லாக நடந்­தது என்று முதற்­கட்ட விசா­ர­ணை­கள் குறிப்­பி­டு­கின்­றன. இருப்­பி­னும், விசா­ரணை தொடர்­கிறது," என்று குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் சொன்­னார்.

சம்­பவ இடத்­திற்­கு நேற்றுக் காலை 11 மணி­ய­ள­வில் சென்­ற­போது, அங்கு போலி­சா­ரும் குடிமைத் தற்­காப்­புப் படை­யி­ன­ரும் 'எஸ்பி' குழும நிறு­வனத்­தி­ன­ரும் இருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.