அமைச்சர்: வழக்கநிலைக்குத் திரும்புவதில் சிங்கப்பூர் தனிப்பாதை அமைக்க வேண்டும்

சிங்கப்பூர் மீண்டும் அதன் பொருளியலைத் திறப்பதிலும் கிருமித்தொற்றுக்கு முந்தைய வழக்கநிலையை எட்ட முயல்வதிலும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை இன்னமும் மேம்பட வேண்டும் என்றும் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மீது தாளாத சுமை ஏற்படுத்தும் அளவுக்கு தொற்றுப்பரவல் பெருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திரு வோங் கூறினார்.

கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

சிங்கப்பூர் எந்த வேகத்திலும் எந்த அளவுக்கும் திறக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளதைச் சுட்டிய திரு வோங், நியூசிலாந்து, சீனா போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை நடப்புக்கு கொண்டுவந்து, கிருமித்தொற்றை ஒழித்த பின்னரே பொருளியலைத் திறப்பது சிங்கப்பூருக்கு சாத்தியப்படாது என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!