செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5dd70c9e-be88-4a84-a99e-7cc72d9b4b22
-

ஹாங்காங், மக்காவிலிருந்து 200 பயணிகள் வர அனுமதி

ஹாங்­காங், மக்­காவ் ஆகிய நகர்­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வர 200க்கும் மேற்­பட்ட குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இந்தத் தக­வலை நேற்று தெரி­வித்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 11.59 மணி நில­வ­ரப்­படி ஹாங்­காங்­கி­லி­ருந்து 230 பேருக்­கும் மக்­கா­வி­லி­ருந்து 13 பேருக்­கும் சிங்­கப்­பூர் வர விமா­னப் பயண அனு­ம­தி­யைத் தான் வழங்­கி­யி­ருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

இன்றுமுதல் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர அந்­தப் பய­ணச்­சீட்டு அனு­மதி வழங்­கும். அவற்­றுக்­கான விண்­ணப்­பங்­கள் இம்­மா­தம் 19ஆம் தேதி தொடங்­கின.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் பய­ணி­கள் கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்டு. அதில் 'தொற்று இல்லை' எனத் தெரி­ய­வந்­தால் சிங்­கப்­பூ­ரில் தங்­க­ளது சொந்த நட­வ­டிக்­கை­க­ளைப் பய­ணி­கள் மேற்­கொள்­ள­லாம். வசிப்­பி­டத்­தில் இருக்­கும் கட்­டாய உத்­த­ரவை அவர்­கள் நிறை­வேற்ற தேவை­யி­ராது. ஆனால், சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் காலத்­தில் அவர்­கள் சில நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு நடக்க வேண்­டும். எடுத்­துக்­காட்­டாக, 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லியை அவர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்.

வோங்: வழக்கநிலைக்குத் திரும்புவதில் நாடு தனிப்பாதை அமைக்க வேண்டும்

மீண்டும் திறப்பதிலும் கிருமித்தொற்றுக்கு முந்தைய வழக்கநிலையை எட்ட முயல்வதிலும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கப்பூர் தனிப்பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சரும் கொவிட்-19 பரவலுக்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை இன்னும் மேம்பட வேண்டும் என்றும் நமது மருத்துவக் கட்டமைப்பு மீது தாளாத சுமை ஏற்படுத்தும் அளவுக்கு தொற்றுப்பரவல் பெருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திரு வோங் கூறினார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் திரு வோங் இதைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எந்த வேகத்தில், எந்த அளவுக்கு திறக்கவேண்டும் என்பதில் இருவேறுபட்ட எதிர்க்கருத்துகள் உள்ளதை விவரித்த திரு வோங், நியூசிலாந்து, சீனா போல கடும் கட்டுப்பாடுகளையும் முடக்கங்களையும் கொண்டுவந்து, கிருமித்தொற்றை ஒழித்த பின்பு திறப்பது சிங்கப்பூருக்கு சாத்தியப்படாது என்று அவர் தெரிவித்தார்.

துக்கம், இழப்பு பற்றி அறிந்துகொள்ள

கலைக் கண்காட்சியும் மாநாடும்

துக்கம், இழப்பு ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட, கலைக் கண்காட்சி, பயிலரங்குகள், மாநாடு, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடுத்த மாதத்தில் மூன்று வாரத்துக்கு நடைபெறும்.

துக்கத்தால் ஆன திரைச்சீலை (Tapestries of Grief) எனும் அந்த மூன்று வார நிகழ்வுக்கு கிரீஃப் மேட்டர்ஸ் எனும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. துக்கம் பற்றியும் துக்கப்படுவோருக்கு ஆதரவான சமூகப் பழக்கங்களையும் பற்றியும் அறிந்துகொள்வதையும் ஊக்குவிக்கும் மோன்ஃபோர்ட் சமூக சேவை அமைப்பு அந்த இயக்கத்தை நடத்துகிறது.

வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளாஸா சிங்கப்பூராவில் இடம்பெறவுள்ள கண்காட்சியில் நிபுணர்துகளின் உதவியுடன் துக்கப்படுவோர் உருவாக்கிய 450க்கும் அதிகமான கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பந்துகளும் (படம்) அடங்கும்.

இசை, ஓவியம் வழி துக்கத்தைக் கையாளும் வழிகள் பற்றி ஆலோசகர்கள் பயிலரங்குகளை வழிநடத்துவார்கள். அத்துடன், துக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவுதல், அன்புக்குரியவர் இறப்புக்குப் பின்னர் சட்ட விவகாரங்களைக் கையாள்வது, உள்ளிட்ட தலைப்புகளில் இணையம் வழி உரைகள் இடம்பெறும்.