ஈராண்டுகளில் 27,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கொடை அளிக்கப்பட்டன

ஈராண்டுகளில் 27,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கொடை அளிக்கப்பட்டன

1 mins read
b15736c9-c705-4fa7-b3a2-49cee11d9f46
-

கடந்த ஈராண்­டு­களில், சுமார் 160 கொடை­யா­ளர்­கள் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த 27,000க்கும் அதி­க­மான பொருட்­களை தேசிய நூலக வாரி­யத்­துக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ள­னர்.

கடந்த 1858ஆம் முதல் 1859ஆம் ஆண்­டு­வரை அச்­சி­டப்­பட்ட பிந்­தாங் திமோர் எனும் அரிய ஆங்­கி­லச் செய்­தி­தா­ளின் பிர­தியை அண்­மை­யில் திரு ஜான் கோ, 66 வழங்­கி­னார். சிங்­கப்­பூ­ரின் நில­வி­யல், குடியிருப்புப் பேட்டைகளைப் பற்றிய சுமார் 7,000 புகைப்படங்களையும் அஞ்சல் அட்டைகளையும் திரு கோ கிம் சே கொடையாக அளித்தார்.

பத்­தாண்­டுக்கு மேலாக, உள்­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­நாட்­டி­லி­ருந்­தும் வாரி­யம் இத்­த­கைய பொருட்­களை நன்­கொ­டை­யா­கப் பெற்­று­வ­ரு­கிறது. ஆவ­ணக் காப்­புக்­குத் தேர்வாகும் பொருட்கள், பெரும் பாலும் சிங்­கப்­பூர், தென்கிழக்காசியா வுடன் தொடர்புடையவை. உயிர்வாயு நீக்கப்பட்டு, பூச்சிகளைக் கொல்ல நைட்ரோஜன் செலுத்துப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன.