சூதாட்ட, பாதுகாப்பு இடைவெளி மீறியதன் தொடர்பில் 21 பேர் மீது விசாரணை

சூதாட்ட, பாதுகாப்பு இடைவெளி மீறியதன் தொடர்பில் 21 பேர் மீது விசாரணை

1 mins read
b75aa270-6a97-4416-bfba-915eb65aaeae
பறிமுதலான சூதாட்டப் பொருட்கள். படம்: சிங்கப்பூர் காவல்துறை -

புக்­கிட் பாத்­தோக்­கில் உள்ள வர்த்­த­கப் பகுதி ஒன்­றில் 11 பெண்­களும் 10 ஆண்­களும் ஒன்­று­கூடி சூதா­டி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அங்கு காவல்­து­றை­யி­னர் நடத்­திய சோத­னை­யில் இது தெரி­ய­வந்­தது. அவர்களில் ஒரு 42 வயது பெண்ணும் 39 வயது ஆணும் அப்பகுதியை விளையாட்டுக் கூடமாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மற்றவர்கள் 29லிருந்து 67 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனையில் சூதாட்டம் தொடர்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொவிட்-19(தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) (கட்­டுப்­பாட்டு ஆணை) விதி­மு­றை­கள் 2020 சட்­டத்­தின்­கீழ் பாது­காப்பு தூர இடை­வெளி விதி­மு­றை­களை மீறி­ய­தன் தொடர்­பில் பிடி­பட்ட 21 பேர் மீதும் விசா­ரணை நடத்­தப்­படும். குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக 10,000 வெள்ளி அப­ரா­தம் அல்­லது சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். சட்­ட­வி­ரோ­த­மாக ஓர் இடத்தை விளை­யாட்­டுக் கூட­மா­கப் பயன்­ப­டுத்­தி­யது நிரூ­பிக்­கப்­பட்ா­லும் தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.