குட்டி பாண்டா ஆணா பெண்ணா என்று விரைவில் தெரிந்துவிடும்

குட்டி பாண்டா ஆணா பெண்ணா என்று விரைவில் தெரிந்துவிடும்

1 mins read
d485bfc6-cc14-4e3e-af88-83f7330cf089
தன் குட்டிக்கு ஜியா ஜியா சிறந்த தாயாக இருந்து வருவதாகவும் தன்னுடனேயே முடிந்தவரை வைத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. படம்: சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் -

ஜியா ஜியா, காய் காய் பாண்டா கர­டி­கள் சிங்­கப்­பூர் வந்து ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அண்­மை­யில் அவற்­றுக்­குக் குட்டி ஒன்று பிறந்­தது.

இதை­ய­டுத்து, குட்­டிக்கு இரண்டு வய­தா­கும்­போது, அது சீனா­வுக்­குத் திருப்­பித் தரப்­படும் என்று கூறப்­பட்­டது.

சீனா­வின் இனப்­பெ­ருக்க விலங்­கு­க­ளு­டன் அது சேர்ந்து எதிர்­கா­லத்­தில் தன் சொந்த இனப்­பெ­ருக்க முயற்­சி­யில் இறங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், குட்­டி­யின் பெற்­றோ­ரைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் வைத்­தி­ருக்க, சீனா­வு­டன் சிங்­கப்­பூர் வன­வி­லங்கு காப்­ப­கம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது.

இதற்­கி­டையே, பாண்டா குட்டி ஆணா, பெண்ணா என்­பதை இன்­னும் நான்கு முதல் ஆறு வாரங்­களில் தெரிந்­து­கொள்­ள­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

குட்டி பிறந்து 100 நாட்­கள் நிறை­வ­டை­யும்­போது, அதற்­குப் பெயர் சூட்ட உத­வு­வ­தற்­காக பொது­மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஜியா ஜியா மற்­றும் அதன் குட்­டி­யின் நட­வ­டிக்­கை­களை அறிந்­து­கொள்ள ஆர்­வம் உள்ளவர்கள், வன­வி­லங்கு காப்­ப­கத்­தின் 'யூடி­யூப்' தளத்தைப் பார்­வை­யி­ட­லாம்.