சிங்கப்பூரரான 70 வயது சூவா கீ லோய் இம்மாதம் ஐந்தாம் தேதியன்று பெண் நோயாளி ஒருவரை மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் மீது ஒரு மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தடை உத்தரவு உள்ளதால் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
இதனுடன் தொடர்பில்லாத வேறு சம்பவங்களில் குடும்பத்தாரை மானபங்கப்படுத்தியதாக இரு ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மூன்றாவதாக ஒருவர் சக ஊழியரை பல முறை மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தடை உத்தரவு உள்ளதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. மூவரும் 45 வயதுக்கும் 63 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
மேலும், சிங்கப்பூரர்களான முகமது சியமீர் முகமது ஷமுதி, அங் செங் வெய், மலேசியர்களான லாய் சி சுவான், ஷந்த்ரு முத்துசாமி, இந்தியாவின் ராஜேந்திரன் சுரேஷ் மேனன் ஆகியோர் மீதும் மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்கள் 19 வயதுக்கும் 33 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பத்தாவது நபர், 35 வயது குர்ஜித் சிங்.
அனைத்து மானபங்கச் சம்பவங்களும் 2016ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஈராண்டுச் சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவற்றில் எதுவும் விதிக்கப்படலாம்.
14 வயதுக்கு உட்பட்டவரை மானபங்கப்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவற்றில் எதுவும் விதிக்கப்படலாம்.
50 வயதைத் தாண்டிய குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க முடியாது.

