சிங்கப்பூர்: பொங்கோல் பேருந்து நிலையத்தையும் தோ பாயோ பேருந்து நிலையத்தையும் சேர்ந்த பணியாளர்கள், கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக பரிசோதனை செய்யப்படுவர். அங்கு கிருமித்தொற்றுக் குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அவ்வாறு கூறினர்.
பொங்கோல் பேருந்து முனையத்துடன் 11 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புடையவை. இவற்றில் 10 பேர் ஊழியர்கள். 11ஆவது நபர், ஊழியர் ஒருவரின் குடும்பத்தில் உள்ளவர்.
தோ பாயோ பேருந்து முனையத்தின் கிருமித்தொற்றுக் குழுமத்தில் உள்ள 25 பேர் அனைவருமே அங்குள்ள பணியாளர்கள்.
இந்த இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்களையும் தாம் விசாரிக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.