சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் முனையம் 3 அடுத்த புதன்கிழமை முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும். கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்கள் அவை அடைக்கப்பட்டிருந்தன.
சிங்கப்பூர் எல்லைக்கட்டுப்பாடுகளைக் குறைப்பதாக அறிவிப்புகள் இந்த மாதம் வெளிவந்ததை அடுத்து அதிக பயணிகள் இங்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.