உலகளவிலான புதிய வாய்ப்புகள் மூலம் சிங்கப்பூர் பயனடையும்

உலகளவிலான புதிய வாய்ப்புகள் மூலம் சிங்கப்பூர் பயனடையும்

1 mins read
720745cc-84b0-4504-8faf-181118545009
-

கொரோனா கொள்­ளை­நோய் ஏற்­

ப­டுத்தி இருக்­கும் உல­க­ள­வி­லான மாற்­றங்­க­ளால் உரு­வா­கும் புதிய வாய்ப்­பு­கள் மூலம் சிங்­கப்­பூர் பயன்­பெ­றும் என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

உலக நில­வ­ரத்­திற்­கேற்ப வாய்ப்­பு­கள் அமை­யும் என குறிப்­பிட்ட அவர், மின்­னி­லக்­க­ம­யம்-தொடர்­புத்­தி­றன்-புத்­தாக்­கம் போன்­ற­வற்­றின் மீது அதி­க­ரித்­தி­ருக்­கும் கவ­னம், விரை­வாக வள­ரும் பசு­மைப் பொரு­ளி­யல், உள்­ளூர் நிறு­வ­னங்­களை உல­க­ம­ய­மாக்­கு­வ­தில் காணப்­படும் தீவி­ரம் போன்­ற­வற்றை அதற்கு உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.

அதே­நே­ரம் உல­கப் பொரு­ளி­யல் சூழல் போட்­டி­மிக்­க­தாக மாறி வரு­கிறது என்­றும் திரு கான் கூறி­னார். தொழில்­நுட்­பம் மற்­றும் வர்த்­த­கம், விரை­வான தொழில் ஒருங்­கி­ணைப்பு, மின்­வர்த்­த­கம் மற்­றும் மெய்­நி­கர் அனு­ப­வங்­களில் அதி­க­ரித்து வரும் பய­னீட்­டா­ளர் விருப்­பம் போன்­றவை இந்­தப் போட்­டித்­தன்­மை­யில் அடங்கும் என்­றார் அவர்.

"இது­போன்ற மாற்­றங்­கள் உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்­சிப் பாதை­யில் பெரி­ய­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். நமக்­கான வாய்ப்­பு­க­ள் உருவாகும்போது அவற்றைப் பயன்­ப­டுத்தி கொள்­ளை­நோ­யி­லி­ருந்து வலு­வாக சிங்­கப்­பூர் மீட்­சி­ய­டை­யும்," என்று வர்த்­தக தொழில் அமைச்­சின் பொரு­ளி­யல் கலந்­து­ரை­யா­ட­லில் திரு கான் தெரி­வித்­தார்.

இந்­நி­கழ்வு நேற்று மெய்­நி­கர்­வழி நடத்­தப்­பட்­டது.