தேவை உள்ள ஊழியர்களுக்குத் தேவைப்படும் உதவிகள்

தேவை உள்ள ஊழியர்களுக்குத் தேவைப்படும் உதவிகள்

4 mins read
ebdefddc-c06b-47d5-aab2-2ed0aa25325f
-

கொவிட்-19 கார­ண­மாக உல­கம் முழு­வ­துமே ஏரா­ள­மான ஊழியர்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். பல வேலை­கள் இனி­மேல் இராது என்ற நிலை­கூட ஏற்­பட்டு உள்­ளது. வேலை பார்த்து பொருள் ஈட்டி வாழ்க்­கையை நடத்த வேண்­டிய நிலை­யில் இருக்கும் லட்­சோ­ப­லட்­சம் மக்­கள் இது­வரை தாங்­கள் பார்த்­தி­ராத புதிய ஓர் உலகை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

இது­வரை பெற்­று வந்துள்ள தேர்ச்­சி­களும் திறமை­களும் ஆற்றல்களும் தொட­ர்ந்து ஏற்­பு­டைய நிலை­யில் இருக்­குமா, தொடர்ந்து வேலை பார்க்க அவை போதி­ய­வை­தானா என்று தங்­க­ளைத் தாங்களே கேட்­டுக்­கொள்­ளும் நிலைக்கு உலக ஊழி­யர்­கள் தள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

காபந்து அரசு நிர்­வாக முறை- அதா­வது மக்­களுக்கு வரை­முறை இல்­லாத கால அள­வுக்கு நிதியையும் உத­வி­யை­யும் ஆத­ரவை­யும் இல­வ­ச­மாக அளிக்கும் ஒரு முறை­யைக் கடைப்­பி­டித்­து­வ­ரும் பல நாடுகளும் திக்­கு­முக்­காடி திண்­டா­டு­கின்­றன.

அந்த முறை­யைக் கைவிட்­டு­விட்டு வேறு வழி யைப் பார்க்­க­வேண்­டிய நிலை­ பல நாடு­களுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கம் தன் மக்­க­ளுக்கு ரொக்­க­மா­கக் கொடுத்து கொடுத்து பழக்­கப்­படுத்தும் நாடுகளில் அந்­த­ முறை நன்கு நிலை­யூன்­றிய ஒரு பழக்­க­மாகி­விடுவதால் மக்­கள் எப்­போ­து­மே­ அ­ர­சிடம் இருந்து எதி­ர்பார்க்­கும் போக்­கி­லேயே தங்­கள் வாழ்வை அமைத்­துக்கொள்­கிறார்­கள்.

அவர்­கள் பெறுப­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்­கள். இத­னால் நாட்­டின் பொரு­ளி­யல் உறிஞ்­சப்­படும் ஒரு நிலை ஏற்­படுகிறது. உழைக்­க­வேண்­டும், தேர்ச்சியை மேம்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும், வேலை பார்க்க வேண்­டும் என்ற ஒரு மனநிலைக்கு ஊக்­கக் குறைவு ஏற்பட்டு­ வி­டு­கிறது.

இத்­த­கைய அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டித்து வந்த நாடு­களில் பல நாடு­களும் கடை­சி­யில் அந்த முறை­யைக் கைவிட்டுவிட்டன.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்தவரை இத்­த­கைய காபந்து முறை ஒத்துவராத ஒன்று.

இத­னால்தான் தன் நாட்டு மக்­களில் ஒவ்வொரு­­வரின் சொந்த முயற்­சியை அடிப்­படை முத­லீட­ாக ஆக்கி அவர்­க­ளுக்கு இயன்­ற­வரை உதவும் அணுகு முறையை அரசாங்கம் கடைப்பிடித்து வரு­கிறது.

காலம் எப்­போ­துமே மாறு­வ­தால் பொரு­ளி­ய­லும் கால ஓட்டத்­திற்கு ஏற்ப தானும் உரு­மாற்­றம் அடைய வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கிறது. புதிய பொரு­ளி­ய­லுக்கு ஏற்ப ஊழி­யர்­களும் மாறிக்கொள்ள வேண்டும் என்­ப­தால் மக்­கள் ஆயுள் முழு­வ­தும் தங்­கள் தேர்ச்சி­களை மேம்­படுத்­திக்கொண்டே வரவேண்­டும் என்­பதை இடை­வி­டா­மல் அரசாங்கம் வலி­யு­றுத்தி வருகிறது. இதற்கு ஆத­ரவு அளித்து தன் மக்­கள் நாட்­டின் பொரு­ளி­யலுக்­குப் பாத­க­மாக இல்லை, சாத­க­மா­கவே இருக்­கி­றார்­கள் என்­பதை அரசாங்கம் உறு­திப்­படுத்­து­கிறது.

பொரு­ளி­யல் பரி­ண­மிக்­கும் நிலை­யில் எல்லா ஊழி­யர்­க­ளுமே அதற்கு ஏற்ப மாறிக்­கொள்­ளத்­தான்­வேண்­டும் என்றாலும் இதில் முக்­கி­ய­மா­க பட்­டத்­தொ­ழி­லர்­கள், நிர்வா­கி­கள், மேலா­ளர்­கள் ஆகி யோரைக் குறிப்­பிட்­டா­க­ வேண்­டும்.

இவர்­களில் 20 முதல் 60 வரை வய­துள்ள 9,000 பேரை உள்­ள­டக்கி ஆய்வு ஒன்று நடத்­தப்­பட்­டது. இத்­த­கைய ஊழி­யர்­கள் பொரு­ளி­யல் ரீதி­யில் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கி­றார்­கள். அது­வும் 40க்கும் அதிக வய­துள்ள முதிர்ச்சி பெற்ற ஊழி­யர்­கள் எதி­ர்நோக்­கும் சிர­மங்­கள் மிக­வும் குறிப்­பி­டத்­தக்க வைக உள்­ளன என்பது அதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இவர்கள் பள்­ளிக்­குச் செல்­லும் பிள்­ளை­க­ளின் செல­வைச் சமா­ளிக்க வேண்­டும்; மறு­பக்­கம் வீட்­டில் உள்ள வய­தான பெற்­றோ­ரைப் பரா­ம­ரிக்­க­வேண்டும்; பொது­வாகவே இவர்­க­ளுக்கு உட­னடிக புதிய வேலை கிடைக்­காது; தொழி­லா­ளர் சந்­தை­யில் மீண்­டும் சேர்ந்­து­கொள்­ளும்போது அல்­லது புதிய தொழில்­து­றைக்கு மாறும்­போது இவர்­க­ளுக்கு கிடைக்­கும் சம்­ப­ள­ம் குறைந்து­வி­டும் வாய்ப்பு உண்டு.

ஆகையால் கொவிட்-19 கார­ண­மாக ஏறக்­குறைய எல்லாத் துறை­க­ளை­யும் சேர்ந்த ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்­றா­லும் குறிப்பாக பட்­டத்தொழிலர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள் ஆகி­யோ­ரி­டம் கவனம் செலுத்த வேண்­டிய ஓர் அவ­சி­யம் தேசிய அள­வில் ஏற்­பட்டு இருக்­கிறது.

இதனை உணர்ந்து இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் குரல்­கொ­டுத்து இருக்­கிறது. இவர்­கள் புதிய பாணி வேலை­க­ளுக்கு மாறிக்­கொள்ளவேண்­டிய நிலை­யில் இருப்­ப­தால், குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு நிதி உதவி வழங்க வேண்­டிய தேவை இருப்­பதை தொழிற்­சங்க இயக்­கம் சுட்­டிக்­காட்டி இருக்­கிறது.

வேலை­களை இழந்து இருக்­கும் இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு நிதி உதவி அளிக்க தொழிற்­சங்க இயக்­கம் ஆத­ரவு தெரி­விக்­கிறது. இவர்­க­ளுக்கு அதிக வேலை வாய்ப்பு, பயிற்சி வாய்ப்­பு­கள் தேவை என்­ப­தை­யும் அது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

என்­றா­லும் பட்­டத்தொழி­லர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­க­ளுக்கு நிதி ஆத­ரவு அளிப்­பது என்­பது அவ்­வ­ளவு எளிமைன ஒரு காரி­ய­மாக இருக்­காது என்­ப­தை­யும் தொழிற்­சங்க இயக்­கம் உணர்ந்து இருக்­கிறது. இப்­போ­தைய கொவிட்-19 தொற்று சூழ்­நிலை அசா­தா­ர­ண­மான ஒன்­றாக இருக்­கிறது.

இந்த நிலை­யில், தொழி­லா­ளர் சந்­தையைக் கைகொடுத்து காக்க வேண்­டிய ஒரு சூழலை சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கு­கிறது. அதே­வே­ளை­யில், தொடர்ந்து நிதி உதவி அளிப்­பது என்­பது ஒரு பழக்­க­மாக போய்­வி­டும். அந்­தப் பழக்­கம் கார­ண­மாக உழைத்து பாடு­பட்டு வேலை தேட வேண்­டும் என்ற ஊக்­கம் மக்­க­ளி­டையே குறைந்­து­வி­டும் என்­ ப­தை­யும் அது மன­தில் கொள்ள வேண்டி உள்ளது.

ஆகைல் பட்­டத்தொழி­லர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள் ஆகி­யோ­ருக்­கும் மற்ற ஊழி­யர்­களுக்கும் எந்த அள­வுக்கு நிதி­யு­தவி அளிப்­பது என்­பதை முடிவு செய்­வ­தில் அர­சாங்­கம் பல­வற்றை­யும் சீர்­தூக்கிப் பார்த்து, எப்­போது கொடுப்­பது, எந்த அள­வுக்குக் கொடுப்­பது, எவ்­வ­ளவு காலத்­திற்குக் கொடுப்­பது என்­பதை எல்­லாம் கவ­னத்­தில் கொள்ள வேண்டி இருக்­கிறது.

வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு நிதி ஆத­ரவு அளிப்­பது என்­பது அவர்­கள் தங்­க­ளுக்கு புதிய வேலையை தேடிக்­கொள்ள எடுக்­கும் முயற்­சி­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­ட­தாக இருக்க வேண்­டும். இது மிக­வும் முக்­கி­ய­மான ஒன்று.

காபந்து அணு­கு­மு­றை­யைக் கைவிட்­டு­விட்டு லாப­க­ர­மான முறை­யில் மக்­கள் வேலை­யில் அமர்ந்து பொருள் ஈட்ட வகை செய்­வதே சிங்­கப்­பூர் ஊழி­யர் நலன், நல்வாழ்வுக் கொள்­கை­க­ளின் மிகமுக்­கிய அம்­ச­மாக தொடர்ந்து இருந்து வர­வேண்­டும்.

ஊழி­யர்­களில் எளி­தாக பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்­யும்­போதும் இந்­தக் கண்­ணோட்­டம் அவ­சி­யம்.